Powered By Blogger

புதன், 31 டிசம்பர், 2014

Medicine to conceive-கர்ப்பம் தரிக்க மாமருந்து

கர்ப்பம்  தரிக்க  மாமருந்து :


வாறான   மங்கையர்  கெர்பமாக
வறையுறேன்  பசும்பாலு  வசம்புந்தானும்
நீறான் விழுதிஇலை  மூலிதானும்
நிலையான குப்பை மேனி  சமனாய்க்  கூட்டி

காறான பால் தனிலே  குழப்பியே தான்
கனமாக  இருவேளை  கொண்டாயானால்
சோரான  கிருமியது  அற்றுப் போகும்
செனிக்குமே  பிள்ளையது  செனிக்கும்  பாரே .........தன்வந்திரி மகரிஷி

விளக்கம் :


தன்வந்திரி பகவான்  பெண்கள் கர்ப்பம் தரிக்க  உடலைப் பக்குவப்படுத்த
சுரண  முறை வைத்தியத்தை  பற்றி சொல்லி இருக்கிறார்  அதை கொண்டு பலன் பெறாலாம்
தன்வந்திரி  மகரிஷியை  வணங்கி  அவர் ஆசியை பெற்று வைத்தியத்தை ஆரம்பிக்கவும் .

வசம்பு,விழுதி இலை மூலிகை ,குப்பைமேனி  இம் மூன்ரையும் சம அளவுஎடுத்து நிழலில் உலர்த்தி  சரி எடையாக  எடுத்து இடித்து  வைத்துக்கொள்ளவும் .
இச் சூரணத்தை பசும் பாலில் காலை-மாலை உணவுக்கு முன் குழப்பி சாப்பிட்டு வர ,கர்ப்பப் பையில் இருந்திடும் கிருமிகள் அழிந்து போய்  கர்ப்பம் தரித்து குழந்தை..

செனிக்குமது பிள்ளையது பிறக்கும் பாரு
தெளிவாகும் திரேகமது சொலிக்கும் பாரு
கனிக்குமே இந்த முறை பொய்யாதையா
காசினியில் யாரும்தான் சொல்லமாட்டார் .......தன்வந்திரி  மகரிஷி


 வசம்பு
விழுதி இலை (ஆலமரத்து இலை ) மூலிகை
குப்பைமேனி -------பசும் பால்






   

திங்கள், 29 டிசம்பர், 2014

பழனி பாதயாத்திரை காவடி பூஜை




பழனி பாதயாத்திரை காவடி பூஜை
அன்புடன் அனைவரும் ஆனந்தமாக வாழ  வேண்டி 

பஞ்சமுகப்ரதியங்கிரா தேவி பக்தர்கள் சார்பாக காரைக்குடியில் 23.01.2015
வெள்ளிக்கிழமை காலையில்  காவடி பூஜை நடை பெற உள்ளது 
காலை 10 மணி முதல் பஜனை நடை பெரும் அதை தொடர்ந்து காவடி தீபாராதனை ,அன்னதானம் நடை பெரும் 

நாள் 23.01.2015,வெள்ளிக்கிழமை 

 இடம் :
பெத்தா முருகப்ப செட்டியார் வீடு 
81 மெ .மெ  வீதி காரைக்குடி

வேண்டத்தக்கது  அறிவாய் நீ 
வேண்ட முழுதும் தருவோய்  நீ 
வேண்டி நீ யாது அருள்  செய்தாய் 
யானும் அதுவே வேண்டின் அல்லால் 
வேண்டும் பரிசு  உண்டென்னில் 
அதுவும் உன்றன் விருப்பன்றே 

அன்புடன் அனைவரும் நலம் பெற அழைக்கிறோம் அனைவரும் வருவீர் அருள் பெறுவீர் 

தொடர்புகொள்ள 
;சுந்தர்-



Teeth ,Gum பல் ஈறு பலப்பட /அழுகல் நீங்க


பல் ஈறு பலப்பட /அழுகல்  நீங்க


மிளகுசோற்  றுப்பு  மிகாதொன்றாய்க்  கூட்டின்
அளவு பல்  தீநீர்  தவிர்ப்பு ......................குறள்

விளக்கம் :

மிளகு , சோற்று உப்பு  இரண்டையும்  சம அளவு எடுத்து பொடி செய்து  இரண்டு கிராம் அளவுஎடுத்து  காலை ,மாலை  பல் துலக்கி அழுகிய பக்கம் தலை சாய்த்து  படுத்திருந்தால் கெட்ட நீர்  முற்றும்  வெளியாகும் ,நோய் குணமாகும்    

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

கார்த்திகேய ப்ரபாவம்


கஷ்ட நிவர்த்தி  மாமருந்து:

மஹா பாரதத்தில்  வன பர்வத்தில்  மார்கண்டேய மகரிஷியால்
தர்மபுத்திரர்க்கு உபதேசிக்கபட்ட கார்த்திகேய ப்ரபாவம்  எனும்  ஷண்முக  மந்திரம் ---

அன்புடன்  உலக மக்கள் அனைவரும்  படித்துப் பயன் பெற
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரதியங்கிரா  கோயில்  சுவாமிஜி அவர்கள் ஆசியுடன்

 பாராயணம் செய்து பயன் பெருக  வளம் பெருக .

ஓம் குரு குஹாய  நமஹா
ஓம் ஆக்நேயா நமஹா
ஓம் ஸ்கந்தாய  நமஹா
ஓம் தீப்த  கீர்த்தையே  நமஹா
ஓம் அனாமையாய  நமஹா
ஓம் மயூர கேதவே நமஹா
ஓம் தர்மாத்மனே  நமஹா
ஓம் பூதேசாய  நமஹா
ஓம் மகிஷா ர்த்தனாய நமஹா
ஓம் காமஜிதே நமஹா
ஓம் காமதாய  நமஹா
ஓம் காந்தாய நமஹா
ஓம் சத்யவாஹே நமஹா
ஓம் புவநேஸ்வராய நமஹா
ஓம் சிசுவே நமஹா
ஓம் சீக்ராய  நமஹா
ஓம் சசயே நமஹா
ஓம் சண்டாயயே ------------------------------18
ஓம் தீப்தவர்நாயே  நமஹா
ஓம் அமோகாயே  நமஹா
ஓம் அனகாயே  நமஹா
ஓம் ரவுத்ராயே நமஹா
ஓம்  ப்ரியாய நமஹா
ஓம்  சன்றானநாய  நமஹா
ஓம் தீப்தசக்தையே  நமஹா
ஓம் பிரசாந்தாத்மனே    நமஹா
ஓம் பத்ரக்ருதே நமஹா
ஓம் கூடமோ ஹணாய நமஹா
ஓம் சஷ்டி ப் ரியாய நமஹா
ஓம்   தர்மாத்மனே நமஹா
ஓம்  பவித்ராய  நமஹா
ஓம் மாத்ருவத்சலாய நமஹா
ஓம் கன்யா பர்தாய நமஹா
ஓம் விபக்தாய நமஹா
ஓம் ச்வா ஹெய்யாய நமஹா
ஓம் ரேவதி சுதாய நமஹா --------------------36
ஓம்  பிரபவே  நமஹா
ஓம்  நேதாய நமஹா
ஓம் விசாகாய நமஹா
ஓம் நைக மேயாய நமஹா
ஓம் சுச்சராய  நமஹா
ஓம் சீவ்ரதாய நமஹா
ஓம் லலிதாய நமஹா
ஓம்  பால க் ரீட னக  ப்ரியாய நமஹா
ஓம்  கசாரீ ணே    நமஹா
ஓம் ப் ரம சாரிணே  நமஹா
ஓம் சூராய  நமஹா
ஓம் சரவநோத்பவாய நமஹா
ஓம் விஷ்வாமித்திர ப்ரியாய   நமஹா
ஓம் தேவசேனா ப்ரியாய நமஹா
ஓம் வாசுதேவ  ப்ரியாய  நமஹா
ஓம் பிரியாய    நமஹா
ஓம் பிரியக்ருதே  நமஹா
ஓம் கார்த்திகேயாய நமஹா ---------------54

தினமும்  காலையில் இரு முறை படித்து வர  நன்று .
 கார்த்திகேய ப்ரபாவம் முற்றியது 


எந் தாயும்  எனக்கருள்  தந்தையும்  நீ
சிந்தாகுல  மானவை  தீர்த்  தெனையாள்
கந்தா கதிர்வேலவனே  உமையாள்
மைந்தா குமார மறை நாயகனே .---கந்தரனுபூதி






Child health protection - குழந்தைகள் நலம் காக்க


குழந்தைகள் நலம் காக்க

இருகாய்  அதிமதுரம் ஈரத்தை யக்கிர
ஒருவசம்பு  சேய்நோய்  உறைக்கு              குறள்

விளக்கம் :

சாதிக்காய் ,மாசிக்காய் ,அதிமதுரம் ,சிற்றரத்தை ,பேரரத்தை ,அக்கிராகாரம் ,வசம்பு   இவ் ஏழு பொருட்களையும்  சம அளவு எடுத்து  தூளாக்கி  பச்சை  வெற்றிலை  சாறை விட்டு  அரைத்து  உருட்டி காய வைத்துக்கொள்ளவும்
ஒரு நாள் விட்டு ஒரு நாள் 5 உறை தாய் பாலில்அல்லது தேன் /வெந்நீர்  கொடுத்தால்  மிகவும் நன்று .




திங்கள், 15 டிசம்பர், 2014

ஆதாரமாக வரும் முருகன்

யாருமற்ற பேருக்கு  ஆதாரமாக  வரும்  முருகன்

ஆதாரமிலேன்  அருளைப்  பெறவே
நீதான்  ஒரு  சற்று நினைந்திலையே
வேதாகம   ஞான  வினோத மனா
தீதா  சுரலோக  சிகாமணியே .......கந்தரனுபூதி 

உலகத்தின்  அனைத்து பற்றுக்களையும் இழந்தவர்க்கு ஆதாரமாக இருந்து அருள் புரிவவன்  முருகன்  ---அருணகிரிநாதர்


சனி, 13 டிசம்பர், 2014

Increase memory power குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்க

Increase Memory power 

குழந்தைகளுக்கு  நினைவாற்றல் அதிகரிக்க 


வல்லாரைப்  பாகு வழங்கும்  நினைவாற்றல்
நல்லாவின்  பால் பின் அருந்து ...............................குறள்

விளக்கம்


வல்லாரைக் கீரையை  காய வைத்து தூள்  செய்து கொண்டு அதனுடன்
சாதிக்காய் ,சாதிப்பத்திரி ,மாசிக்காய் ,வால் மிளகு  இவற்றின் தூளை

50 கிராம் வல்லாரை தூள் மற்ற 4கின் தூள் 20 கிராம்  சேர்த்து  பனங்கல்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து   பாகாக  வைத்துக்கொண்டு தினமும் காலை உணவுக்கு முன் 5 கிராம் எடுத்துகொடுத்து  சாப்பிட வைக்கவும் .பின் பசுவின் பால் அருந்தக் கொடுக்கவும்

நினைவாற்றல் அதிகரிக்கும் ,இதயம் வலுப்பெறும்

அல்லது  இவற்றின் தூள் சேர்த்து வைத்து அதில் 5 கிராம் எடுத்து தேனில் குழைத்து உண்ண கொடுக்கலாம் ,பின் பசும் பால் கொடுக்கவும்



வியாழன், 11 டிசம்பர், 2014

Eye sight improvement for all age கண் பார்வை வலுப்பெற

Eye sight  improvement for all age
கண் பார்வை  வலுப்பெற 



நீலியொடு  மஞ்சள் கரிசலை வல்லாரை
மூலிநுண்தூள்  கண்பார்வைக் குண்  -------குறள்


விளக்கம்


அவுரி எனும் நீலி ,மஞ்சள் கரிசலாங்கண்ணி ,வல்லாரை  இம் மூன்ரையும் 

சம அளவு  எடுத்து  நிழலில்  உலர்த்தி நன்கு காய்ந்த பிறகு இடித்து தூளாக்கி

 தினமும் காலையில் 2 கிராம் அளவு தக்க அனுபானத்தில்  அருந்திவர கண் பார்வை 

தெளிவாகும் .
அனுபானம் : பசும்  பால்,தேன் ,நீர்  


     

வெள்ளி, 5 டிசம்பர், 2014

Improve your face tone முக அழகு பெற


Improve your face tone   முக அழகு பெற 


இளமுருங்கை   வேரும் இலைதுளசி வேரும்

கொளுங்குளியல்  மேனி  முகத்து .............குறள் 


விளக்கம் 

இளம் முருங்கை வேரும் ,துளசி இலை ,வேர்  சம அளவு  எடுத்து  அரைத்து  
முகத்தில் பூசி ஊற வைத்துக்  கழுவி   வந்தால்  முகம் சிகப்பாக அழகாக  மாறும் 
உடல் முழுவதும் பூசிக் குளிக்க மேனி அழகாகும் 
 

வியாழன், 4 டிசம்பர், 2014

Food allergy medicine உணவினால் ஏற்படும் நஞ்சு மாற







உணவினால்/மருந்தினால்  ஏற்படும்  நஞ்சு மாற :

எம்மருந்து நஞ்செனினும் ஏற்கா தவுரிவேர்

செம்மிளகு  வல்லாரை  சேர் ................குறள்


விளக்கம்

அவுரி வேரோடு மிளகு, வல்லாரைக் கீரை  இவை சேர்த்து கொதிக்க வைத்து அருந்திவன்தால்  மருந்தினால் உள்ள வீரியமும் ,உணவினால் ஏற்பட்ட நஞ்சும்  நீங்கும் .


புதன், 3 டிசம்பர், 2014

திமிர் வாத நோய்க்கு குப்பைமேனி

திமிர் வாத நோய்க்கு குப்பைமேனி 



காந்திமெ  யிலைக் கறி  கனிவுட யில மெய் 
யாந்திமிர்   வாதநோ  யாதிகள்  போய்விடும் .....தேரையர்


காந்திமெய்  எனும்  குப்பைமேனி இலையை   கறியாக  சமைத்து  விருப்பமுடன்  தொடர்ந்து உணவில் சேர்த்து உண்டு வர  உடலில் ஏற்படும்
திமிர் வாத நோய் முற்றிலும் குணமாகும் .

(குதி கால் வலி ,முழங்கால் வலி )உடலில்வாதத்தினால்  ஏற்படும் அனைத்து  வழியும் தீரும் .




திங்கள், 1 டிசம்பர், 2014

Jaundice Medicine மஞ்சள் காமாலை நோய் தீர மருந்து :

Jaundice Medicine
மஞ்சள் காமாலை நோய் தீர  மருந்து :

கூட்டுனங்கா  மாலைக்குக்  கொழுந்திலைப்  பூவரசு

நாட்டுமிள  கோரேழு  நாள் .................குறள்


விளக்கம் :

காமாலை நோய் தீர  ஒரு கைப்பிடி அளவு பூவரசுஇலை  கொழுந்தும் 11 மிளகும்  சேர்த்தரைத்து அதில்  நெல்லிக்காய்  அளவு காலையில் தொடர்ந்து 7 நாள் அருந்திவர  கொடிய காமாலை நோய் நீங்கும்  

பத்தியம் எண்ணெய் ,நெய்,உளுந்து  சேர்க்கக்கூடாது .




ஞாயிறு, 30 நவம்பர், 2014

முதியோர்/ஆதரவு அற்றோர் சேவை மையம்

                                             விரைவில்  ஆரம்பம் .........



                                        முதியோர்/ஆதரவு அற்றோர்  சேவை மையம்
                                                                              காரைக்குடி

 இது ஒரு மானாமதுரை  ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி  கோயிலின்

சேவை மையம்

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா  வேத தர்ம ஷேத்ரா  டிரஸ்ட் ,
பஞ்ச பூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு
மானாமதுரை -630606

தொடர்ப்புக்கு :

திரு.முத்துராமலிங்கம்    9443417289
திரு.நாச்சியப்பன்                9486651700
திரு.அண்ணாமலை           9442559844



சனி, 29 நவம்பர், 2014

அரண்மனைப் பொங்கல் அய்யா வீட்டு பஜனை



அரண்மனைப் பொங்கல் அய்யா வீட்டு பஜனை ,காரைக்குடி .


காரைக்குடி  அரண்மனைப்பொங்கல்  அய்யா  வீட்டில்  மாலை
6.30 மணி அளவில் பஜனை ஆரம்பம் 15.1.2015 முதல் தொடக்கம்
8.45 -9 மணி அளவில் தீபாராதனை நடை பெரும் அதை தொடர்ந்து
அன்பர்கள் வழங்கும்  இரவு  உணவு  தினமும்  நடை பெரும்

பாத யாத்திரை செல்லும் பக்தர்களும்,காவடி எடுக்கும் அன்பர்களும்
இறையருள் வேண்டும் அன்பர்களும்  நினைத்த காரியம் கை கூட
பழனி ஆண்டவனின் அருள் பெற  வர வேண்டியது.


கந்தனின் பேர் சொன்னால் கவலைகள்  கரைந்துவிடும்

மஹா பாரதத்தில்  தர்மபுத்திரரக்கு  மார்கண்டேய மகரிஷி  உபதேசித்தது
54 முருகனின் திருநாமங்கள் '--விரைவில்


  

பால் விணை நோய் (HIV-Aids)மருந்து

பால் விணை  நோய் (HIV-Aids)மருந்து


எல்லையை  மீறும்  எவர்க்கும்  முடிவாகத்
தொல்லைதொடர்  பால்நோய்  பெருக்கு .......குறள்


எண்ணான்கு  காலை இளமதென்னம்  பூக்கொதிநீர்
கொண்மின்முன்  பால்விணை  நோய்க்கு ......குறள்


விளக்கம் ;

மனித வாழ்வில்  ஒழுக்க  விதிகளை மீறுவோர் எவராயினும்  முடிவாக துன்பங்கள்  தொடர்ந்து வரும் ,குறிப்பாக ஒருமையில் மணமக்கள்  மாறு படுவதால் பால்விணை  நோய் உயிர் கொல்லி நோயாக உண்டாகிறது .(HIV-Aids)


32 நாள்  காலை  வேளை  மட்டும்  இளம் தென்னம் பாளையை இடித்து கொதிநீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து  பதமுடன் அருந்திவர
பால்விணை  நோய் தீரும் .



 

வெள்ளி, 28 நவம்பர், 2014

Cancer External Medicine புற்று நோய் வெளி மருந்து

Cancer External Medicine  புற்று நோய் வெளி மருந்து



தேங்காய்த்  துருவல் தவசி முருங்கைஇலை 

தாங்காத  புற்றுமேல்  பற்று       ......குறள் 


விளக்கம் ;

கைப்பிடி அளவு தேங்காய் துருவி எடுத்துக்கொண்டு அதனுடன்   சம அளவு தவசி  முருங்கை இலை எடுத்து இருப்புச் சட்டியில் இட்டு  வதக்கி  புற்று நோய் உள்ள இடத்தில் ஒற்றடம்  கொடுக்கவும் பின்பு அதை பிழிந்து வடித்த நெய்யை  உடம்பு முழுவதும் தடவி வரவும் .

ஞாயிறு, 23 நவம்பர், 2014

பரக்கலக்கோட்டை கார்த்திகை சோமவாரத் திருவிழா அழைப்பு

பரக்கலக்கோட்டை கார்த்திகை சோமவாரத் திருவிழா அழைப்பு 


அருள்மிகு மத்தியபுரீஸ்வரர் 
(பொது ஆவுடையார்) திருக்கோயில் ,பரக்கலக்கோட்டை
பட்டுக்கோட்டை  வட்டம் ,
தஞ்சாவூர்  மாவட்டம்

நாள் 08-12-2014
திங்கள் கிழமை ,பரக்கலக்கோட்டையில்  மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்ச முக ப்ரத்யங்கிரா  தேவி கோயில் மற்றும்  பத்தர்கள் இணைந்து நடத்தும்  கார்த்திகை சோமவாரத் திருவிழா அழைப்பு .
வெள்ளால  மரத்தின் கீழ் அரூபமாய்  இருந்து அருள் புரிகிறார் .

பிரதாப சிம்மபுரம் ,தென் சிதம்பரம்  என்று பெருமை பெற்ற தலம் .
அனைவரும் வந்து அன்னதானத்தில் கலந்து கொண்டு  இறை அருள் பெற்று ஆனந்தமாய் வாழ அழைக்கிறோம் .

தொடர்புக்கு :வீரபத்திரன் -9095869722,9043170027




சனி, 22 நவம்பர், 2014

Ovarian Cancer medicine கருப்பை புற்று நோய் மருந்து

Ovarian Cancer medicine           கருப்பை புற்று நோய் மருந்து





பெண்கருவாய்ப் புற்றைப் பிழையில் சேங் கொட்டைத்தூள் ,
தண்சந்  தனம்தேற்றான் மாற்று      ......................குறள் 


விளக்கம் ;


பெண்களுக்கு கருப்பை வாயில் உண்டாகின்ற புற்று நோய்க்கு தேற்றான் 
விதையின் தூளும் ,சந்தனத்தூளும் ,சுத்தி செய்த சேராங்கொட்டை  தூளும் சமமாக எடுத்து இருநேரம் அருந்தி வரவும்,இவற்றின் கொதி நீர் கொண்டு வெளியே கழுவி வரவும் .

ஞாயிறு, 16 நவம்பர், 2014

Food Delivery for oldage people at Karaikudi: காரைக்குடியில் முதியோருக்கு உணவு

                                                                                                      

                       
















                         

                                                                                 உ
                                                                          சிவமயம்
                                                               தர்மோ  ரக்ஷதி ரக்ஷித

                                                                    அன்புடன் உலக
                                        மக்கள் அனைவரும் ஆனந்தமாக  வாழ  வேண்டி

   தனி ஒரு மனிதனுக்கு  உணவில்லா  உலகினை  உருவாக்குவோம்

காரைக்குடியில் முதியோருக்கு உணவு



ஆன்மீகப் பெரு மக்களே  உங்களின் ஆதரவு  வேண்டி

காரைக்குடியில் இருக்கும் முதியோர் ,ஆதரவு உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்களுக்கும் ஒரு சேவை செய்ய ஆதரவு அளிக்க ,மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்ச முக  ப்ரதியங்கிரா  கோயில் பக்கதர்கள் மானாமதுரை  சாமி அவர்களின்  வழிகாட்டுதலின்படி அவர்கள் இருக்கும் இடத்திலேயே பக்குவமாய்  சமைத்திட்ட  உணவை  கொண்டு போய் கொடுத்து  பசி ஆற வைக்க முயற்சிக்கிறார்கள்

நகரின் மையப் பகுதியில் ,நல்ல திறமை வாய்ந்த சமையல் ஆள்களைக் கொண்டு சமைத்து பதிவு செய்த முதியோர்களுக்கு தினமும்  3வேளையும்
குறித்த நேரத்தில் உணவை கொண்டு போய் கொடுக்க இருக்கிறார்கள்

வசதி உள்ள முதியவர்கள் கட்டணம் செலுத்தலாம் ,பதிவு செய்து கொண்டு இந்த வசதியை பெறலாம்.

வசதி இல்லாதவர்களுக்கு உறவினர் /தெரிந்தவர்  பரிந்துரையின் பேரில் இலவசமாக  அளிக்கப்படும் ,இதற்காக அவர்கள் இரண்டு டிப்பன் கேரியர்கள்
வாங்கி எங்கள் அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும் ,

காலை,மதியம்,இரவு  உணவு உங்கள் இடம் வந்து சேரும் இப்போது இவ் வசதி காரைக்குடியில் அறிமுகம்செய்ய நினைக்கிறார்கள் .

இதற்க்கான  இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது ,மாருதி ஓம்னி வேன்  தேவைபடுகிறது அதற்கும் ஏற்பாடு நடந்து வருகிறது
சேவை மனப்பான்மையுடன்  வேன்  ஓட்டுவதற்கு  டிரைவர்கள்  தேவை தங்கும் இடம்,உணவு  கட்டணம் இல்லை .

காரைக்குடி நகரின் மையப் பகுதியில் வீட்டுடன் ,காலி இடமும் இருந்தால் தெரியப்படுத்தவும் ,அதற்குண்டான வாடகையையும் தெரியப்படுத்தவும்

தொடர்புக்கு :
திரு.முத்துராமலிங்கம் ,9443417289
சுந்தர் ;9842858236
நா.நாச்சியப்பன் ;9486651700
அண்ணாமலை ;9840424292,9442559844
சீனிவாசன் :9894087796




புதன், 12 நவம்பர், 2014

Reduce blood sugar level immediately உடனடியாக சர்கரையின் அளவு ரத்தத்தில் குறைய



உடனடியாக  சர்கரையின் அளவு ரத்தத்தில் குறைய


நூல்கோல்  சாறு எடுத்து 150 மில்லி உடன் ஆவாரம் பூ  ஒரு ஸ்பூன் சாறு
சேர்த்து காலையில்  சாப்பிட்டால்  சர்க்கரை அளவு  உடனே குறையும் .
சாப்பிடும் முன்பு சர்க்கரை அளவு பரிசோதனை செய்து விட்டு சாப்பிட ஆரம்பிக்கவும் .

15 நாளுக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால்  போதும் ,பரிசோதனையில் முடிவை பொறுத்து  மறுமுறை சாப்பிடவும் .


திங்கள், 10 நவம்பர், 2014

Save Cow---பசு பராமறிப்பு இயக்கம்


 பசு பராமறிப்பு  இயக்கம் 

பசு வதை தடுப்பு/பராமரிப்பு  இயக்கம் :

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்ச முக ப்ரத்தியன்கிரா கோயிலில் கோ சாலை வைத்து பசுவை பராமரித்து வருகின்றார்கள் .மேலும் பசுக்களை பராமரிக்க இயலாதவர்கள்  ,வீதியில்  உணவின்றி அலைய விடாமல் ,இறைச்சிக்கு விற்றுவிடாமல் பசுவை இங்கு கொண்டு வந்து விட்டால் அதன் ஆயுசு பரியந்தம் வரை பாதுகாத்து இரட்சிக்கப்படும் .

டாட்டா குட்டியானை வைத்திருக்கும் அன்பர்களுக்கும் ஒரு அன்பு வேண்டுகோள் .

மானமதுரைக்கு  கொண்டு வந்து விட இயலாதவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியாக இலவசமாகவோ ,குறைந்த கட்டணத்திலோ கொண்டு வந்து விட்டு  அந்த புண்ணிய கைங்கரியத்தில் நீங்களும் பங்கு பெறலாம் ,உங்களுக்கும் இறைஅருள் கிட்டும்.

அன்புள்ளம் கொண்ட நமது அன்பர்கள் தங்கள்  பகுதியில் பசுக்களை வதைக்கு அனுப்ப விடாமல் தடுத்து அல்லது எடுத்துக்குச் சொல்லி  மானாமதுரைக்கு அனுப்ப ஏற்பாடு  செய்யலாம் ,வண்டி  வாடகையை ஒருவரோ ,பலரோ  பகிர்ந்து கொள்ளலாம் .

முதலில் அழிப்பதை  தடுப்போம் ,வளர்க்க முயலுவோம் ,

பசுவின் கண்களில் மிளகாய்: பசுக்களை கேரளாவுக்கு கடத்துகையில் பல நாள் பயணம், நீர் - உணவு - ஓய்வு இன்மை போன்ற காரணங்களால் பசுக்கள் சோர்வு அயர்ச்சி அடைந்து நிற்க கூட முடியாமல் தடுமாறி கீழே விழும்.
அப்படி விழாமல் , பசுக்களை கடத்தி கொலை செய்யும் மாமிச வெறி பிடித்த ராட்சதர்கள், பசுவின் கண்களில் மிளகாயை செருகி வைத்து விடுகிறார்கள். மேலும் கொதிக்கும் நீரை பிடித்து அதன் காதுகளில் ஊற்றுவார்கள். ஏதும் அறிய வாயில்லா ஜீவன்கள் வலியாலும் எரிச்சளாலும் துடி துடிக்கும். பசுக்களை தெய்வமாகவோ, ஒரு உயிரினமாகவோ பாராமல் வெறும் சதை பிண்டமாக பார்க்கும் இந்த கொலையாளிகளை என்ன செய்தாலும் தகும். அதே மிளகாயை இவர்கள் கண்களிலும், சுடு நீரை காதுகளிலும் ஊற்றினால் தான் என்ன..??
பாவிகள் படம்: PFCI கடத்தப்பட்ட மாடுகளை மீட்ட பொழுது எடுத்தது!

நமக்கு  பால் கொடுத்த பசுவிற்கா இந்த நிலை ,எளியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கு போராட வேண்டும்.

இப்போது பராமரிக்க இடம் உள்ளது ,மானமதுரை கோயிலின்  அருகில் உள்ளது

இந்த தர்மத்தில் பங்கேற்க அனைவரும் வாரீர்,இறை அருள் பெறுவீர்.

தொடர்புக்கு ; சுந்தர் ;9842858236,9865993238,9442559844  மானமதுரை
                         
;

ஞாயிறு, 9 நவம்பர், 2014

அகத்தியர் கோயில்கள் பற்றிய விபரம் தேவை

 
அகத்தியர் கோயில்கள்  பற்றிய  விபரம் தேவை


      அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய்  வாழ வேண்டும்


ஆன்மிக அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் ,மானமதுரை ஸ்ரீ மஹா
பஞ்சமுக ப்ரதியங்கிரா கோவிலில் இருந்து  சித்தர்கள்  வழிபட்ட,நிர்மாணித்த ஆலயங்களில்  ஆராதனை,வழிபாடு ,அன்னதானம் பல இடங்களில்  நடைபெற்று  வருகிறது.

உங்கள் ஊரில் சித்தர்கள் நிர்மாணித்த கோயில்கள்,சித்தர் கோயில்கள் ,இருந்தால் எங்களுக்கு தெரியபடுத்தவும் .

அங்கும் வழிபட  பக்தர்கள் வருவார்கள் .அன்னதானம்  நடக்கும் .முதற்கட்டமாக

அகத்தியர்    நிர்மானித்த  கோயில்கள் ,அகத்தியர் இருக்கும் கோயில்கள்
அகத்தியர்  வழி பட்ட கோயில்கள் தெரியப்படுத்தவும் .

ஊர் பெயர் :
கோயில் பெயர்
இறைவன் பெயர்
இறைவி பெயர்

கோயிலுக்கு வழி :

உங்களது  தொலை பேசி எண்
கோயில்  தொலைபேசி /குருக்கள்  எண்

இந்த உதவியை செய்யுமாறு  கேட்டுக்கொள்கிறோம் .

தொடர்புக்கு :

சுந்தர்:9865993238,98428 58236
அண்ணாமலை -9442559844
மெயில்: prathyangiradevi33@gmail.com
                   annamalaitpr@gmail.com
                    srisandi2013@gmail.com



சனி, 8 நவம்பர், 2014

Get rid of Pimples முகப்பரு நீங்க

Get rid of Pimples முகப்பரு நீங்க :


துத்தி இலைபாலில்  தோய்த்தரைத்துப்   பூசுவதால் ,

குத்தும் பருக்களிலை  கூறு .                        ....................குறள் 

விளக்கம் 


துத்தி  இலையை  பாலில்  அரைத்து  பற்றாக இட்டு காய விட்டு பின்பு கழுவிட்டால்  பருக்கள்  மறையும் ,காலை  மாலை இருமுறை  தொடர்ந்து செய்யவும்  நல்ல பலன் கிடைக்கும் .
 

வியாழன், 6 நவம்பர், 2014

Weight loss உடல் எடை குறைய

Weight  Loss   உடல் எடை குறைய :


மிளகு 100கிராம் ,
சீரகம் 100 கிராம்
லவங்கம் 100 கிராம்
லவங்கப் பட்டை 100 கிராம்

மேற்கண்ட நான்கையும்  காய வைத்து  பொடியாக்கி வைத்துக்கொண்டு
காலை,மாலை, வெந்நீரில் 5 கிராம் அளவு நன்றாக கொதிக்கவைத்து குடித்து வர  உடல் எடை குறையும் .,,


                                        அகஸ்தியர் ,பூவனூர்,நீடாமங்கலம்  அருகில்

புதன், 5 நவம்பர், 2014

PREVENTION OF GREY HAIR AT YOUNGER AGES இளநரை மாற

PREVENTION OF  GREY HAIR AT YOUNGER  AGES

இளநரை மாற :

வேம்பாடம்  பட்டை  விரவின்தெங்  கெண்ணயிலே ,
தேம்பா  திளநரைக்கு  மாற்று .                       ,,,,,,,,,,,,,,,குறள்


விளக்கம்


வேம்பாடப்பட்டையைப் பொடித்து    நல்லெண்ணையில் சேர்த்து நன்றாக  காய்ச்சி  வடி கட்டி வைத்துக்கொண்டு தலைக்கு தடவி வர இள நரை  இல்லாமல்  போகும் .

TO REDUCE CREATININE LEVEL உடம்பில் க்ரியாடின் அளவைக் குறைக்க

TO REDUCE CREATININE LEVEL


உடம்பில் க்ரியாடின்  அளவைக் குறைக்க  
உப்பு  குறைய  





பிஞ்சுக் கடுக்காய் படிகாரம் நெல்லிவற்றல் ,

விஞ்சுமுடல்  உப்புக்கு மாற்று ........குறள் 



விளக்கம் ,

பிஞ்சுக்கடுக்காய் ,படிகாரம் ,நெல்லிவற்றல்  இம் முன்றையும் தூளாக்கி  உண்டு  வந்தால் உடலில் மிகுந்துள்ள உப்பு  குறையும் 


திங்கள், 3 நவம்பர், 2014

for Nervous weakness நரம்பு தளர்ச்சி நீங்க




நரம்பு தளர்ச்சி  நீங்க :

நரம்புநலத்  திஞ்சோமம் \சீரகம்  கோட்டம்
திரிகடுகீர்  சாதி கிராம்பு .               .....................குறள்

விளக்கம் :


உடலில் நரம்பு மண்டலம்  வலிமை பெற  இஞ்சி ,ஓமம் ,சீரகம் ,சுக்கு ,மிளகு ,திப்பிலி ,சாதிக்காய் ,சாதிப்பத்திரி ,கிராம்பு  இவற்றின் தூளை தேனில் குழைத்து உண்ணவேண்டும் 

சனி, 1 நவம்பர், 2014

Ear pain relief காது வலி நீங்க :

காது வலி நீங்க :

இந்துப்பு சுக்கிவை  ஏற்ற  சமத்தூளில்

தந்தவெண்ணெய்   காதுக்கு  நன்று ............குறள்

விளக்கம்

இந்துப்பு ,சுக்கு  இவற்றின் தூளை  சமமாய் எடுத்து  வெண்ணையில் குழைத்துண்ண  காது வலி  தீரும் .


வியாழன், 30 அக்டோபர், 2014

Natural Surgery method கத்தியின்றி கட்டிகள் உடைய :


natural surgery method 

கத்தியின்றி கட்டிகள் உடைய :

பாலை இலைப்பால்  படுகட்டி  சீழ்முளையைத் 
தோலை  யருத்தகற்றும்   சொல்  ............குறள் 


விளக்கம் :
பாலை இலைப்  பாலை  பழுத்த  கட்டியின் மேல் கோடாக  இழுத்திட்டால்  கத்தியின்றி தோல் அருபட்டுவிடும் அத தோலின் கீழ் உள்ள சீழ் ,முளை  யாவையும் கழிந்துவிடும் .இதுவே இயற்கை  அறுவை  சிகிச்சையாகும் .  

புதன், 29 அக்டோபர், 2014

sugar patients wounds relief oil சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு படும் காயங்கள் விரைவில் ஆறிட


                                                             அரளி எண்ணை
sugar patients wounds relief oil

சர்க்கரை  நோய் உள்ளவர்களுக்கு  படும்  காயங்கள்  விரைவில் ஆறிட 


100 மில்லி தேங்காய் எண்ணெயில்  ஒரு கைபிடி அளவு  சிகப்பு அரளிப்  பூவை போட்டு  ஒரு கண்ணாடி  பாட்டிலில்  3-5 நாள்  வெயிலில் வைக்கவும் 
நன்றாக  சாரு எண்ணெயில்  இறங்கிவிடும்  .பிறகு  ஒரு மெல்லிய  துணியில் வடிகட்டி பூவை பிழிந்து எடுத்துவிடவும் .இப்போது   பாட்டிலில் எண்ணெய்யை  பத்திரமாக  வைத்துக்கொண்டு மேல் பூச்சாக  உபயோகப்படுத்தவும்  .நாள்பட்ட பெரிய புண்ணையும் எந்நிலையில்  ஆற்றிடும்  தன்மை வாய்ந்தது 



இது  கடுமையான விஷம்  ,மிகவும்  கவனமாக மேல் பூச்சாக மட்டும் உபயோகப்படுத்தவும் .குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும் 
   

செவ்வாய், 28 அக்டோபர், 2014

Tonsil medicine டான்சில் நீங்க

Tonsil medicine டான்சில் நீங்க

கர்பூரவள்ளியின்  கழலிலையை  தின
நற்ப்பாலர்  நோயெல்லா நாசமா யகலுமே   ..........தேரையர் 



விளக்கம் :

கற்பூரவள்ளியின்  இலையை  புதிதாக  எடுத்து  சாரு பிழிந்து  குழந்தைகளுக்கு சங்கில் புகட்டினால்  சளி, இருமல் ,மாந்தம் ,நீர்கோவை  நீங்கி விடும்.ஒன்று முதல் மூன்று  இலை மேல்  மீகாமல் குழந்தையின் வயதுக்கு தகுந்தாற்போல .  

உள்நாக்கு அழற்சி  (டான்சில் ) உள்ள குழந்தைகளுக்கு  வயதுக்கு தக்க  அளவு கர்பூரவள்ளியின் இலையை மருந்தாகக் கொடுக்கவும் .இலையை  அரைத்து 
அப்படியே கொடுக்கலாம் ஒரு நெல்லிக்காய்  அளவு  காலையில்  கொடுக்கவும் .கொதிக்கவைத்த தண்ணிரை  பயன்படுத்தவும் 

Jaundice medicine மஞ்சள் காமாலை மருந்து

Jaundice medicine
மஞ்சள் காமாலை மருந்து


சங்கன்  அதிமதுரம் கீழ்நெல்லி  கட்டுதயிர் ,
பொங்குங்கா மாலை மருந்து ................குறள் 

விளக்கம் :

சங்கன்  வேர் ,அதிமதுரம் ,கிழா நெல்லி  இம்மூன்றையும்  மை போல் அரைத்து புளித்த தயிரில் கலந்து 50 மில்லி கிராம் அளவு காலை மட்டும் உணவிற்கு முன் உண்டு வர  காமாலை நோய் தீரும் .மூன்று நாள் மட்டும் மருந்து சாப்பிடவும் ,பத்தியம் உணவில் கடை பிடிக்கவும் .

தவிர்க்க வேண்டியது 

:உப்பு,எண்ணெய் ,புளி ,மசாலைகள் ,காரம் ,கொழுப்பு சத்துள்ள உணவுகள் . 




ஞாயிறு, 26 அக்டோபர், 2014

urinary track infection medicine சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் நீங்க :

 


சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் நீங்க :


நன்மதுரம் சந்தனமும் நன்னாரி வேர்மிளகும்

மன்னுநீர்த் தாரைநோய்  மாற்று .     ..............குறள்


விளக்கம் :

அதிமதுரம் ,நன்னாரி  வேர்,சந்தனம் ,மிளகும்  , இவற்றின்  தூளை  கொதிக்க

வைத்து அருந்திவர  நீர்த்தாரையில் ஏற்படும் நோய் தீரும்

இதை நோய் அதிகம் இருந்தால் குடி நிராகவும்  அருந்தலாம் , .



சனி, 25 அக்டோபர், 2014

நாய் /பூனை கடிக்கு மருந்து

                       நாய் /பூனை  கடிக்கு மருந்து :

நல்லமணித்  தக்காளி நாய்க்கடிக் குண்மருந்தாம் 

சொல்மேனி  பூனைக் கடிக்கு....................குறள் 


விளக்கம் :

நாய் கடித்தவர்க்கு ,உடனே 
மணத்தக்காளி  இலையை (கீரையை) அரைத்து  குடிப்பதற்கு  உள் மருந்தாக கொடுக்கவும்.

பூனை கடித்தவர்க்கு உடனே  குப்பைமேனி இலையை அரைத்து உல் மருந்தாக கொடுக்கவும் 


நாய்/பூனை கடி பட்ட இடத்தில் உள்ள காயத்தின் மீது  பூச மஞ்சள்,பூண்டு,
மிளகு,கல் உப்பு இவற்றை அரைத்து பூசவும் .


Cancer relief medicine புற்று நோய்க்கு எளிய மருந்து


   புற்று நோய்க்கு எளிய மருந்து :


சத் குருவாய் இருக்கும் பழனி மலை முருகனை வணங்கி  மருந்தை ஆரம்பிக்கவும்



பொடுதலை வல்லாரை பொற்றலை  புங்கன் ,
விடுதலையாம்  புற்றுநோய்க்  குண் ...................குறள்




விளக்கம் :

பொடுதலை ,வல்லாரை மஞ்சள் கரிசலாங்கண்ணி ,புங்கு தளிர் இவற்றை சம அளவு எடுத்து நிழல் காய்ச்சல்லில் வைத்து பின்பு  தூளாக்கவும் ,

 தூளாக்கி தேனில்  குழைத்து காலையும் ,மாலையும்  உண்டு வர  புற்றுநோய்
உடலை விட்டு நீங்கும் .


வியாழன், 23 அக்டோபர், 2014

avoid cold for newborn babies குழந்தை பெற்ற தாய்க்கு சளி பிடிக்காமல் இருக்க


தாய் சேய்  நலம் காக்க :

குழந்தை  பெற்ற  தாய்க்கு சளி பிடிக்காமல் இருக்க எளிய வழி முறை .தாய்க்கும் குழந்தைக்கும்  நலன் பயக்கும்


சுக்கோ டதிமதுரம் திப்பிலி ஏலத்தூள்
தக்கதிதிப்  பைம்புனல்பன்  நோய்க்கு    .........................குறள்



சுக்கு ,அதிமதுரம் ,திப்பிலி ,ஏலம் இவற்றின் தூளை சம அளவு எடுத்து
கொதிநீரில் இட்டு (இது யைம்புனல் நீர் மருந்தாகும்).

10 கிராம் அளவு -மேற்கண்ட பொடியை  நான்கும் சேர்த்தது எடுத்து  கொதிநீரில் இட்டு  குழந்தைக்குத் தாய் நாளைக்கு 3-5 முறை குடிக்க
குழந்தையின்  சளி  நீங்கும் '

சளி பிடிக்காமல் இருக்க தாய் இதை  அவ்வப்போது  அருந்தினால்
சளி குழந்தைக்கு பிடிக்காது .



ஞாயிறு, 19 அக்டோபர், 2014

பல்லி கடிக்கு மருந்து :

                                                                        போகர்
                                                            திருஈன்கொய்மலை  -முசிறி

பல்லி கடிக்கு மருந்து :

பல்லிக் கடிக்குப்  பனைவெல்லம்  உள் மருந்தாம் ,

நல்லமஞ்சள்  நீர்மேல் மருந்து .                            ...............குறள்


விளக்கம் :

பல்லி கடித்தால்  25 கிராம் பனை வெல்லம் உண்ட பின்  கடி பட்ட இடத்தில்
மஞ்சள் நீர்  பூசுவதும்  நஞ்சை  அகற்றும்  நன் மருந்தாகும் .

 

யானைக்கால் நோய் தீர மருந்து


யானைக்கால்  நோய்  தீர மருந்து 


பப்பாளிச் சாறு படுவெயிலில்  பற்றிடுவார் 

எப்பாரும் யானைக்கால்  நோய்க்கு .........................குறள் 

விளக்கம்:

யானைக்கால் நோய் கண்ட காலில்  பப்பாளி பழத்தில்  சாறு எடுத்து 
தடவி வைத்து  காலை  வெய்யிலில் பட விடவும் காய்ந்தவுடன்  மீண்டும் தடவவும் .தினமும் மூன்று ,நான்கு முறை செய்துவர  நோய் குணமாகும் .
 











சனி, 18 அக்டோபர், 2014

மின்சாரத் தைலம்








மின்சாரத் தைலம் 

செய் முறை : 50 கிராம் மெந்தால் ,50 கிராம் த்ய்மால் 50 கிராம்  பூச்சுடம்
இம் மூன்ரையும்  ஒரு பிரவுன் கண்ணாடி புட்டியில் போட்டு இருக்கமாய் மூடி
வைத்துவிடவும் .
அடுத்தநாள்   அது  திரவமாய் மாறி இருக்கும்,
இது வீரியம் அதிகமானது.இதை பாதுக்கப்பாய்  வைத்துக்கொள்ளவும் .



இதில் 10 மில்லி எடுத்து நல்ல தேங்காய் எண்ணெய்யில்  சேர்த்து தனியாக ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்

உபயோகிக்கும் முறை ;

வாந்தி வரும் போது  ஒரு துளி நாக்கில் வைத்தால் வாந்தி  நின்றுவிடும்

தசை வலி ,மூட்டு வலி இருக்கும் இடத்தில் மேல் பூச்சாக பூசிவர  வலி கேட்கும்

தும்மல் சளி  இருந்தால் நெஞ்சில் ,முதுகில் சிறிது தேய்த்து விட்டால்  இதமாகக் கேட்கும் .

மூக்கடைப்பு  இருந்தால் ஒரு துளி எடுத்து மூக்கின் மேல் தடவிவிட  அடைப்பு நிங்கும் .அதிகமாய் தடவினால்  மூக்கு எரியும் .

தலை வலிக்கும் இதை தடவலாம்

இந்த குளிர் காலத்தில் இது வீட்டில் இருந்தால்  அனைவருக்கும் உபயோகமாகும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை.
ஒரு முறை தயாரித்தல் இது 2 அல்லது 3 வருடம்  வரை  வீரியத்துடன் இருக்கும் .

நன்றி :டாக்டர்  புகழேந்தி ,பல்லடம் ,9842214403




கல்வியில் சிறக்க /வேலை சிறக்க படிக்க வேண்டிய பதிகம் :




கல்வியில் சிறக்க /வேலை  சிறக்க   படிக்க  வேண்டிய பதிகம் :

  அருணகிரிநாதர் திருப்புகழில் பாடிய பதிகம் :



மதியால்        வித்தகன்     ஆகி
          மனதால்         உத்தமன்       ஆகிப்
பதிவாகிச்             சிவ ஞான
         பர   யோகத்து   அருள்வாயே
நிதியே         நித்தியமே  என்
       நினைவே நற்     பொருளா  யோய்
கதியே        சொற்     பர வேளே
       கருவூரிற்      பெருமாளே

கரூர்ரில்   பாடியது

இப்பதிகம்  காலையில்  அலுவலகம் செல்லும்  முன் படித்து விட்டு செல்லவும்  படிக்கப் படிக்கப் பலன் உணர்வீர்கள்


குழந்தைகள் கல்வியில் சிறக்க அவர்களை படிக்கச் சொல்லவும் ,



வெள்ளி, 17 அக்டோபர், 2014

இளைத்த குழந்தை உடல் நலம் பெற



இளைத்த குழந்தை  உடல் நலம் பெற :


இளைத்த குழந்தைக்  கியல்கோ  துமைமா

கிளர்மல்லி  சோம்பு கிராம்பு  --------------குறள்

விளக்கம் :-

சில குழந்தைகள் இளைத்திருக்கும்   அவர்களுக்கு  உடல் நலன் பெற  கொடுக்க வேண்டிய  இயல்பான  நல்லுணவு  கோதுமை மாவில் கொத்துமல்லி ,சோம்பு ,கிராம்பு ,இவை சேர்த்து பக்குவமாய்  இனிப்பிட்டு
உண்ண  கொடுக்கவும் .

வியாழன், 16 அக்டோபர், 2014

வெள்ளை நிற சருமம் நிறம் மாற மருந்து


வெள்ளை நிற சருமம் நிறம் மாற  மருந்து  








குன்றியிலைச்  சாற்றில்  கொடிவேலி  வேரரைத்துப் 
                           பொன்றவெண்  புள்ளிகளில்  பூசு -------------------------குறள் 


விளக்கம் :

குன்றிமணி இலை  சாற்றில்  சித்திரமூல  வேர் பட்டையை அரைத்து 
உடலில் உள்ள வெண் புள்ளிகளுக்கு மேல் பூச்சாக  தடவி  வர  நிறம் மாறும் .

கொடிவேலி = சித்திரமூலம் .




காது கேட்கும் திறன் அதிகரிக்க



காது  கேட்கும் திறன் அதிகரிக்க


மஞ்சள் வசம்பு மருவுவேப் பெண்ணேயிடின்,

விஞ்சுமிரு  காதுமந்த மில் ..........................குறள்


விளக்கம் :

மஞ்சள்  வசம்பு இவற்றை தூள்  செய்து  வேப்பெண்ணெயில் இட்டு  காய்ச்சி  வடிகட்டி எடுத்து வைத்துக்கொண்டு  மந்தமான காதில் துளி துளி இட்டு வர
காது மந்தம் நீங்கும்    

செவ்வாய், 14 அக்டோபர், 2014

குழந்தைகளுக்கு திக்கு வாய் சரியாக :


குழந்தைகளுக்கு திக்கு வாய்  சரியாக :          


அகத்தியரை வணங்கி
வசம்பை தூளாக்கி  ஒரு சிட்டிகை  அளவு எடுத்து  தேனுடன்  கலந்து  குழந்தையின்  நாக்கில் தடவவும் .தொடர்ந்து தடவி வர திக்கு வாய்  மாறி
நன்கு  பேச வரும்  .

திங்கள், 13 அக்டோபர், 2014

இடுமருந்து உடலில் இருந்து நீங்க

இடுமருந்து  உடலில் இருந்து நீங்க : 




தேங்காய்ப் பால்  பொட்டிலுப்பு  சேர்தருந்தின்  நல்லெண்ணெய் 
                          போங்காண்  இடுமருந்து  பொய்த்து                                     -------------------குறள் 




விளக்கம் :-

இடு மருந்தால் துன்பபடுபவர்களுக்கு  

தேங்காய் பால் 200 மில்லி
பொட்டிலுப்பு    2 கிராம் 
நல்லெண்ணெய்  200 மில்லி  
இவற்றை ஒன்றாகக் கலந்து  காலையில் பருக கொடுத்தால்  இடு மருந்தின் வேகம் குறையும்  மனமயக்கம்  தீரும் .
அடுத்த வேளை  உணவில்  சோயாவில் கறி மசாலை சேர்த்து  குழம்பாக்கி  அதை  உணவாக (சோற்றில் ) உண்ண வேண்டும் .
அதனால்  அவ்  இடு மருந்தானது  கழிந்து (வெளியாகி ) மனம்  உடல்  நன்மை  பெரும் .

திரிகடுகு சூரணம்

                             திரிகடுகு சூரணம் 

சுக்கு ,மிளகு ,திப்பிலி இம் மூன்றையும்  சம  அளவு எடுத்து வெய்யிலில்  காயவைத்து பொடியாக்கி  சலித்து எடுத்து  வைத்துக்கொள்ளவும் .

சூரணம்  பயன் படுத்தும் முறை :

அளவு : சிறு நெல்லிக்காய் அளவு 

நோயாளியின் தன்மை ,நோயின் தன்மை இவைகண்டு  தண்ணீரிலோ ,
தேன்னில் ,பாலில் அருந்த வேண்டும் .

தேன்னில் காலையும் மாலையும் உண்டால்  ஜன்னி நோய்கள் ,குளிரினால்  உண்டாகும்  நோய்கள்  தீரும் 

நீரில் உண்டால்  மாந்தம்  நீங்கும் .

பனைவெல்லத்தில்  உண்டால் வயிற்று  நோய்கள்  நீங்கும் .

தினமும்   ஒருவன் உண்டு வந்தால்  வைத்தியனை  தேடிச்  செல்லவேண்டியது இல்லை சகல  நோய்களும் தீரும் .

இது  அகத்தியர்  வாக்கு அகத்தியர்  பரிபூரண நூலில் கூறியிருக்கிறார்