Powered By Blogger

வியாழன், 30 அக்டோபர், 2014

Natural Surgery method கத்தியின்றி கட்டிகள் உடைய :


natural surgery method 

கத்தியின்றி கட்டிகள் உடைய :

பாலை இலைப்பால்  படுகட்டி  சீழ்முளையைத் 
தோலை  யருத்தகற்றும்   சொல்  ............குறள் 


விளக்கம் :
பாலை இலைப்  பாலை  பழுத்த  கட்டியின் மேல் கோடாக  இழுத்திட்டால்  கத்தியின்றி தோல் அருபட்டுவிடும் அத தோலின் கீழ் உள்ள சீழ் ,முளை  யாவையும் கழிந்துவிடும் .இதுவே இயற்கை  அறுவை  சிகிச்சையாகும் .  

புதன், 29 அக்டோபர், 2014

sugar patients wounds relief oil சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு படும் காயங்கள் விரைவில் ஆறிட


                                                             அரளி எண்ணை
sugar patients wounds relief oil

சர்க்கரை  நோய் உள்ளவர்களுக்கு  படும்  காயங்கள்  விரைவில் ஆறிட 


100 மில்லி தேங்காய் எண்ணெயில்  ஒரு கைபிடி அளவு  சிகப்பு அரளிப்  பூவை போட்டு  ஒரு கண்ணாடி  பாட்டிலில்  3-5 நாள்  வெயிலில் வைக்கவும் 
நன்றாக  சாரு எண்ணெயில்  இறங்கிவிடும்  .பிறகு  ஒரு மெல்லிய  துணியில் வடிகட்டி பூவை பிழிந்து எடுத்துவிடவும் .இப்போது   பாட்டிலில் எண்ணெய்யை  பத்திரமாக  வைத்துக்கொண்டு மேல் பூச்சாக  உபயோகப்படுத்தவும்  .நாள்பட்ட பெரிய புண்ணையும் எந்நிலையில்  ஆற்றிடும்  தன்மை வாய்ந்தது 



இது  கடுமையான விஷம்  ,மிகவும்  கவனமாக மேல் பூச்சாக மட்டும் உபயோகப்படுத்தவும் .குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும் 
   

செவ்வாய், 28 அக்டோபர், 2014

Tonsil medicine டான்சில் நீங்க

Tonsil medicine டான்சில் நீங்க

கர்பூரவள்ளியின்  கழலிலையை  தின
நற்ப்பாலர்  நோயெல்லா நாசமா யகலுமே   ..........தேரையர் 



விளக்கம் :

கற்பூரவள்ளியின்  இலையை  புதிதாக  எடுத்து  சாரு பிழிந்து  குழந்தைகளுக்கு சங்கில் புகட்டினால்  சளி, இருமல் ,மாந்தம் ,நீர்கோவை  நீங்கி விடும்.ஒன்று முதல் மூன்று  இலை மேல்  மீகாமல் குழந்தையின் வயதுக்கு தகுந்தாற்போல .  

உள்நாக்கு அழற்சி  (டான்சில் ) உள்ள குழந்தைகளுக்கு  வயதுக்கு தக்க  அளவு கர்பூரவள்ளியின் இலையை மருந்தாகக் கொடுக்கவும் .இலையை  அரைத்து 
அப்படியே கொடுக்கலாம் ஒரு நெல்லிக்காய்  அளவு  காலையில்  கொடுக்கவும் .கொதிக்கவைத்த தண்ணிரை  பயன்படுத்தவும் 

Jaundice medicine மஞ்சள் காமாலை மருந்து

Jaundice medicine
மஞ்சள் காமாலை மருந்து


சங்கன்  அதிமதுரம் கீழ்நெல்லி  கட்டுதயிர் ,
பொங்குங்கா மாலை மருந்து ................குறள் 

விளக்கம் :

சங்கன்  வேர் ,அதிமதுரம் ,கிழா நெல்லி  இம்மூன்றையும்  மை போல் அரைத்து புளித்த தயிரில் கலந்து 50 மில்லி கிராம் அளவு காலை மட்டும் உணவிற்கு முன் உண்டு வர  காமாலை நோய் தீரும் .மூன்று நாள் மட்டும் மருந்து சாப்பிடவும் ,பத்தியம் உணவில் கடை பிடிக்கவும் .

தவிர்க்க வேண்டியது 

:உப்பு,எண்ணெய் ,புளி ,மசாலைகள் ,காரம் ,கொழுப்பு சத்துள்ள உணவுகள் . 




ஞாயிறு, 26 அக்டோபர், 2014

urinary track infection medicine சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் நீங்க :

 


சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் நீங்க :


நன்மதுரம் சந்தனமும் நன்னாரி வேர்மிளகும்

மன்னுநீர்த் தாரைநோய்  மாற்று .     ..............குறள்


விளக்கம் :

அதிமதுரம் ,நன்னாரி  வேர்,சந்தனம் ,மிளகும்  , இவற்றின்  தூளை  கொதிக்க

வைத்து அருந்திவர  நீர்த்தாரையில் ஏற்படும் நோய் தீரும்

இதை நோய் அதிகம் இருந்தால் குடி நிராகவும்  அருந்தலாம் , .



சனி, 25 அக்டோபர், 2014

நாய் /பூனை கடிக்கு மருந்து

                       நாய் /பூனை  கடிக்கு மருந்து :

நல்லமணித்  தக்காளி நாய்க்கடிக் குண்மருந்தாம் 

சொல்மேனி  பூனைக் கடிக்கு....................குறள் 


விளக்கம் :

நாய் கடித்தவர்க்கு ,உடனே 
மணத்தக்காளி  இலையை (கீரையை) அரைத்து  குடிப்பதற்கு  உள் மருந்தாக கொடுக்கவும்.

பூனை கடித்தவர்க்கு உடனே  குப்பைமேனி இலையை அரைத்து உல் மருந்தாக கொடுக்கவும் 


நாய்/பூனை கடி பட்ட இடத்தில் உள்ள காயத்தின் மீது  பூச மஞ்சள்,பூண்டு,
மிளகு,கல் உப்பு இவற்றை அரைத்து பூசவும் .


Cancer relief medicine புற்று நோய்க்கு எளிய மருந்து


   புற்று நோய்க்கு எளிய மருந்து :


சத் குருவாய் இருக்கும் பழனி மலை முருகனை வணங்கி  மருந்தை ஆரம்பிக்கவும்



பொடுதலை வல்லாரை பொற்றலை  புங்கன் ,
விடுதலையாம்  புற்றுநோய்க்  குண் ...................குறள்




விளக்கம் :

பொடுதலை ,வல்லாரை மஞ்சள் கரிசலாங்கண்ணி ,புங்கு தளிர் இவற்றை சம அளவு எடுத்து நிழல் காய்ச்சல்லில் வைத்து பின்பு  தூளாக்கவும் ,

 தூளாக்கி தேனில்  குழைத்து காலையும் ,மாலையும்  உண்டு வர  புற்றுநோய்
உடலை விட்டு நீங்கும் .


வியாழன், 23 அக்டோபர், 2014

avoid cold for newborn babies குழந்தை பெற்ற தாய்க்கு சளி பிடிக்காமல் இருக்க


தாய் சேய்  நலம் காக்க :

குழந்தை  பெற்ற  தாய்க்கு சளி பிடிக்காமல் இருக்க எளிய வழி முறை .தாய்க்கும் குழந்தைக்கும்  நலன் பயக்கும்


சுக்கோ டதிமதுரம் திப்பிலி ஏலத்தூள்
தக்கதிதிப்  பைம்புனல்பன்  நோய்க்கு    .........................குறள்



சுக்கு ,அதிமதுரம் ,திப்பிலி ,ஏலம் இவற்றின் தூளை சம அளவு எடுத்து
கொதிநீரில் இட்டு (இது யைம்புனல் நீர் மருந்தாகும்).

10 கிராம் அளவு -மேற்கண்ட பொடியை  நான்கும் சேர்த்தது எடுத்து  கொதிநீரில் இட்டு  குழந்தைக்குத் தாய் நாளைக்கு 3-5 முறை குடிக்க
குழந்தையின்  சளி  நீங்கும் '

சளி பிடிக்காமல் இருக்க தாய் இதை  அவ்வப்போது  அருந்தினால்
சளி குழந்தைக்கு பிடிக்காது .



ஞாயிறு, 19 அக்டோபர், 2014

பல்லி கடிக்கு மருந்து :

                                                                        போகர்
                                                            திருஈன்கொய்மலை  -முசிறி

பல்லி கடிக்கு மருந்து :

பல்லிக் கடிக்குப்  பனைவெல்லம்  உள் மருந்தாம் ,

நல்லமஞ்சள்  நீர்மேல் மருந்து .                            ...............குறள்


விளக்கம் :

பல்லி கடித்தால்  25 கிராம் பனை வெல்லம் உண்ட பின்  கடி பட்ட இடத்தில்
மஞ்சள் நீர்  பூசுவதும்  நஞ்சை  அகற்றும்  நன் மருந்தாகும் .

 

யானைக்கால் நோய் தீர மருந்து


யானைக்கால்  நோய்  தீர மருந்து 


பப்பாளிச் சாறு படுவெயிலில்  பற்றிடுவார் 

எப்பாரும் யானைக்கால்  நோய்க்கு .........................குறள் 

விளக்கம்:

யானைக்கால் நோய் கண்ட காலில்  பப்பாளி பழத்தில்  சாறு எடுத்து 
தடவி வைத்து  காலை  வெய்யிலில் பட விடவும் காய்ந்தவுடன்  மீண்டும் தடவவும் .தினமும் மூன்று ,நான்கு முறை செய்துவர  நோய் குணமாகும் .
 











சனி, 18 அக்டோபர், 2014

மின்சாரத் தைலம்








மின்சாரத் தைலம் 

செய் முறை : 50 கிராம் மெந்தால் ,50 கிராம் த்ய்மால் 50 கிராம்  பூச்சுடம்
இம் மூன்ரையும்  ஒரு பிரவுன் கண்ணாடி புட்டியில் போட்டு இருக்கமாய் மூடி
வைத்துவிடவும் .
அடுத்தநாள்   அது  திரவமாய் மாறி இருக்கும்,
இது வீரியம் அதிகமானது.இதை பாதுக்கப்பாய்  வைத்துக்கொள்ளவும் .



இதில் 10 மில்லி எடுத்து நல்ல தேங்காய் எண்ணெய்யில்  சேர்த்து தனியாக ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்

உபயோகிக்கும் முறை ;

வாந்தி வரும் போது  ஒரு துளி நாக்கில் வைத்தால் வாந்தி  நின்றுவிடும்

தசை வலி ,மூட்டு வலி இருக்கும் இடத்தில் மேல் பூச்சாக பூசிவர  வலி கேட்கும்

தும்மல் சளி  இருந்தால் நெஞ்சில் ,முதுகில் சிறிது தேய்த்து விட்டால்  இதமாகக் கேட்கும் .

மூக்கடைப்பு  இருந்தால் ஒரு துளி எடுத்து மூக்கின் மேல் தடவிவிட  அடைப்பு நிங்கும் .அதிகமாய் தடவினால்  மூக்கு எரியும் .

தலை வலிக்கும் இதை தடவலாம்

இந்த குளிர் காலத்தில் இது வீட்டில் இருந்தால்  அனைவருக்கும் உபயோகமாகும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை.
ஒரு முறை தயாரித்தல் இது 2 அல்லது 3 வருடம்  வரை  வீரியத்துடன் இருக்கும் .

நன்றி :டாக்டர்  புகழேந்தி ,பல்லடம் ,9842214403




கல்வியில் சிறக்க /வேலை சிறக்க படிக்க வேண்டிய பதிகம் :




கல்வியில் சிறக்க /வேலை  சிறக்க   படிக்க  வேண்டிய பதிகம் :

  அருணகிரிநாதர் திருப்புகழில் பாடிய பதிகம் :



மதியால்        வித்தகன்     ஆகி
          மனதால்         உத்தமன்       ஆகிப்
பதிவாகிச்             சிவ ஞான
         பர   யோகத்து   அருள்வாயே
நிதியே         நித்தியமே  என்
       நினைவே நற்     பொருளா  யோய்
கதியே        சொற்     பர வேளே
       கருவூரிற்      பெருமாளே

கரூர்ரில்   பாடியது

இப்பதிகம்  காலையில்  அலுவலகம் செல்லும்  முன் படித்து விட்டு செல்லவும்  படிக்கப் படிக்கப் பலன் உணர்வீர்கள்


குழந்தைகள் கல்வியில் சிறக்க அவர்களை படிக்கச் சொல்லவும் ,



வெள்ளி, 17 அக்டோபர், 2014

இளைத்த குழந்தை உடல் நலம் பெற



இளைத்த குழந்தை  உடல் நலம் பெற :


இளைத்த குழந்தைக்  கியல்கோ  துமைமா

கிளர்மல்லி  சோம்பு கிராம்பு  --------------குறள்

விளக்கம் :-

சில குழந்தைகள் இளைத்திருக்கும்   அவர்களுக்கு  உடல் நலன் பெற  கொடுக்க வேண்டிய  இயல்பான  நல்லுணவு  கோதுமை மாவில் கொத்துமல்லி ,சோம்பு ,கிராம்பு ,இவை சேர்த்து பக்குவமாய்  இனிப்பிட்டு
உண்ண  கொடுக்கவும் .

வியாழன், 16 அக்டோபர், 2014

வெள்ளை நிற சருமம் நிறம் மாற மருந்து


வெள்ளை நிற சருமம் நிறம் மாற  மருந்து  








குன்றியிலைச்  சாற்றில்  கொடிவேலி  வேரரைத்துப் 
                           பொன்றவெண்  புள்ளிகளில்  பூசு -------------------------குறள் 


விளக்கம் :

குன்றிமணி இலை  சாற்றில்  சித்திரமூல  வேர் பட்டையை அரைத்து 
உடலில் உள்ள வெண் புள்ளிகளுக்கு மேல் பூச்சாக  தடவி  வர  நிறம் மாறும் .

கொடிவேலி = சித்திரமூலம் .




காது கேட்கும் திறன் அதிகரிக்க



காது  கேட்கும் திறன் அதிகரிக்க


மஞ்சள் வசம்பு மருவுவேப் பெண்ணேயிடின்,

விஞ்சுமிரு  காதுமந்த மில் ..........................குறள்


விளக்கம் :

மஞ்சள்  வசம்பு இவற்றை தூள்  செய்து  வேப்பெண்ணெயில் இட்டு  காய்ச்சி  வடிகட்டி எடுத்து வைத்துக்கொண்டு  மந்தமான காதில் துளி துளி இட்டு வர
காது மந்தம் நீங்கும்    

செவ்வாய், 14 அக்டோபர், 2014

குழந்தைகளுக்கு திக்கு வாய் சரியாக :


குழந்தைகளுக்கு திக்கு வாய்  சரியாக :          


அகத்தியரை வணங்கி
வசம்பை தூளாக்கி  ஒரு சிட்டிகை  அளவு எடுத்து  தேனுடன்  கலந்து  குழந்தையின்  நாக்கில் தடவவும் .தொடர்ந்து தடவி வர திக்கு வாய்  மாறி
நன்கு  பேச வரும்  .

திங்கள், 13 அக்டோபர், 2014

இடுமருந்து உடலில் இருந்து நீங்க

இடுமருந்து  உடலில் இருந்து நீங்க : 




தேங்காய்ப் பால்  பொட்டிலுப்பு  சேர்தருந்தின்  நல்லெண்ணெய் 
                          போங்காண்  இடுமருந்து  பொய்த்து                                     -------------------குறள் 




விளக்கம் :-

இடு மருந்தால் துன்பபடுபவர்களுக்கு  

தேங்காய் பால் 200 மில்லி
பொட்டிலுப்பு    2 கிராம் 
நல்லெண்ணெய்  200 மில்லி  
இவற்றை ஒன்றாகக் கலந்து  காலையில் பருக கொடுத்தால்  இடு மருந்தின் வேகம் குறையும்  மனமயக்கம்  தீரும் .
அடுத்த வேளை  உணவில்  சோயாவில் கறி மசாலை சேர்த்து  குழம்பாக்கி  அதை  உணவாக (சோற்றில் ) உண்ண வேண்டும் .
அதனால்  அவ்  இடு மருந்தானது  கழிந்து (வெளியாகி ) மனம்  உடல்  நன்மை  பெரும் .

திரிகடுகு சூரணம்

                             திரிகடுகு சூரணம் 

சுக்கு ,மிளகு ,திப்பிலி இம் மூன்றையும்  சம  அளவு எடுத்து வெய்யிலில்  காயவைத்து பொடியாக்கி  சலித்து எடுத்து  வைத்துக்கொள்ளவும் .

சூரணம்  பயன் படுத்தும் முறை :

அளவு : சிறு நெல்லிக்காய் அளவு 

நோயாளியின் தன்மை ,நோயின் தன்மை இவைகண்டு  தண்ணீரிலோ ,
தேன்னில் ,பாலில் அருந்த வேண்டும் .

தேன்னில் காலையும் மாலையும் உண்டால்  ஜன்னி நோய்கள் ,குளிரினால்  உண்டாகும்  நோய்கள்  தீரும் 

நீரில் உண்டால்  மாந்தம்  நீங்கும் .

பனைவெல்லத்தில்  உண்டால் வயிற்று  நோய்கள்  நீங்கும் .

தினமும்   ஒருவன் உண்டு வந்தால்  வைத்தியனை  தேடிச்  செல்லவேண்டியது இல்லை சகல  நோய்களும் தீரும் .

இது  அகத்தியர்  வாக்கு அகத்தியர்  பரிபூரண நூலில் கூறியிருக்கிறார் 

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

சதையடைப்பு ,கல்லடைப்பு


                                      

                   சதையடைப்பு /கல்லடைப்பு


நீர்கல்  சதையடைப்பு நீங்கிவிடும்  வெள்ளரியே 
தேர்வித்து  தூள்பாலில்  கொள் ,                         குறள் 




விளக்கம் :-


சிறுநீர் பாதையில் ஏற்படும்  நீர் அடைப்பு,கல்லடைப்பு ,சதைஅடைப்பு  இவற்றிற்கு வெள்ளரி விதையின் தூளை  பாலில்  குழைத்து  உண்டு  வர 
அனைத்து அடைப்பும்  நீங்கும் .

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

குரல் இனிமைக்கு

ச ரி க ம ப த நி  இசை பாட
குரல் இனிமைக்கு






வல்லாரைச் சாற்றில் வழங்கெழுநாள்  சீரகமும் ,
நல்லிசைக்காம்  திப்பிலியும்  நாடு . .................குறள்



விளக்கம் :-

சீரகத்தையும்  திப்பிலியையும்  சம அளவு எடுத்து  தனித்தனியாக  வல்லாரைச்சாற்றில் ஊறவைத்து  உலர்த்தி இப்படி ஏழு  நாள்  செய்து எடுத்து இடித்து தூளக்கி ஒரு சிட்டிகை அளவு உண்டுவர குரல் இனிமை பெரும் .

ச ரி க ம ப த நி என்பதில்  சீரகம்  முதல்  நான்கு எழுத்து, ப த நி பதப்படுத்திய நீரும் இசைக்கு ஏற்றது என்பது விளங்கும் .



உப்பு நோய் குறைய :

உப்பு நோய்  குறைய :


உணவில் உப்பு/சர்க்கரை  அதிகமானால்  கணையத்தில் உப்பு சேர்ந்தது
உப்பு நோய் உண்டாகிறது .

சிறுநீரில் உப்புமிகச்  சேரினதை   நீக்கும் ,
அறுகொடு  திப்பிலிதேன்  கூட்டு .......குறள்


விளக்கம் :-

சிறுநீரில்  உப்பு மிகுதியானால் அதை  நீக்க  அருகம்புல் ,திப்பிலி  இவற்றை  தூளாக்கி தேன் சேர்த்து  காலை மாலை அருந்திவர  உடலில்  உள்ள  உப்பு குறையும் .

கீரையின் மருத்துவ பலன் :


கீரையின் மருத்துவ பலன் :



கீரைக்கும் காய்கறிக்கும்  செலவிடாத  பணம்  மருந்துக்கும்  மருத்துவருக்கும்  போவது  இயல்பு .

அரைக்கீரையை நெய்யில் துவட்டி  உண்பதால்  ஆண்மை  நலம்  பெரும் .

காசினிக்கீரையை  சர்க்கரை பாகினில் கலந்துண்ண  பல நோய்கள் தீரும் மேலும் கடும் காய்ச்சலும் தீரும் .

தவசி முருங்கைக்கீரையை  உலர்த்தி தூளாக்கி தேனில்  குழைத்து  உண்டு  வர  நாள் பட்ட இருமல் நோய்  தீரும் .

வெள்ளி, 3 அக்டோபர், 2014

முகப் பரு நீங்க எளிய வழி

முகப் பரு  நீங்க  எளிய வழி :

முகப்பரு வராமல் 
தவிர்க்க வேண்டியது :  

இளமையில் முகப் பரு ஏற்படுவது  இயல்புதான் 
 நெய் சேர்ந்த  இனிப்பு  பண்டங்கள்  உண்பதை தவிர்க்கவும் ..
பயத்தினால்  வருவதும்  உண்டு ..
ஒவ்வாமையினாலும் வருவது உண்டு..

கடலையின் மாவில்  கடிபூ ஆவாரை ,
விடின்சுருக் கில்லை  முகத்து ..................குறள் 

விளக்கம் :-

பொட்டுக்கடலை  மாவும்  ,அழகு மிகுந்த  ஆவரம்பூவின்  தூள் இரண்டையும்  சேர்த்து காலையில்  5 கிராம்  உண்டு வர உடல்  வன்மையுரும் ,மேனி  பொன் நிறமாகும் .இதை நீரில் குழைத்து முகத்தில் தடவி  அரை மணி நேரம் கழித்து நன்கு கழுவிவர  முகம் பொலிவாகும் ,பரு நீங்கும் ,முகச்சுருக்கமும்  நீங்கும் .
முக அழகுண்டாகும்  .



புதன், 1 அக்டோபர், 2014

குழந்தைகள்நலம்


குழந்தைகள்  நலம்


பல் முளைக்கும் சேய்கட்குப்  பேதியுறின்  வாழைப்பூ
சொல்லுபுளி  யாரைதேன் கூட்டு         ..".............குறள்


விளக்கம் :-
குழந்தைகளுக்கு  பல் முளைக்கும் காலத்தில்  உண்டாகின்ற பேதிக்கு
வாழைப்பூ ,புளியாரை இவற்றின்  சாறுகளை சம அளவு எடுத்து இதில் அரைபங்கு உடன் தேன்  சேர்த்துக் கொடுக்கவும்
சாறுகள் இரணடும்  சேர்த்தது அரை ஸ்பூன் +அரை ஸ்பூன் தேன்