Powered By Blogger

திங்கள், 29 செப்டம்பர், 2014

குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்க

குழந்தைகளுக்கு நினைவாற்றல்  அதிகரிக்க 




வசம்போர் அரைப்பங்கு  வல்லாரை பத்து 

வசமுடற்காம்  பேரறிவின் மேற்று .                     -------குறள் 

விளக்கம் :

வசம்புத்தூள் அரைப்பங்கும் வல்லாரைத்தூள்  பத்துப் பங்கும் சேர்த்து  ஒன்றாக்கி  அதை 2கிராம்  அளவு  காலையில்  40 நாள் உண்ண  உடலின்  நச்சு தன்மை நீங்கி  மூளைக்கு   பலம்  உண்டாகும் .இதுவே  நினைவாற்றல்  அதிகரிக்க ஏற்ற  மருந்து .



வெள்ளி, 26 செப்டம்பர், 2014

to Increase sperm count தாது நலம் பெற

to Increase sperm count
தாது நலம் பெற
;-





இன்றைய  காலக்கட்டத்தில்  ஆண்மக்கள்  உணவு ,உறங்குதல் ,பழக்கவழக்கம் இவற்றால்  உடல்  நலம் பாதிக்கப்படுவதால்  குழந்தை  பெற  இயலாமை

,இவற்றை தவிர்க்க  குறள்  காட்டும்  வழியில்  நடந்தால்  வாழ்வில்  வளம்  பெற்று நன் மக்களையும் பெறலாம் .

மிக எளிமையானது .

கசகசா  வால்மிளகு  கற்கண்டு  பாதாம்
வசமுடற்காம் வன்மையுறும்  தாது    .............குறள்




கசகசா ,வால்மிளகு,கற்கண்டு வாதுமை  பருப்பு (பாதாம் )
இவை சேர்த்து வெல்லத்தில்  பாகு செய்து  காலை, இரவு  அருந்திவர
உடலுக்கும்  மனத்திற்கும்  நன்மை தரும்
தாது  நலம்  பெரும்
( 16 நாள்  நெல்லிக்காய்  அளவு )


அறிவாற்றல் மிக்க அழகாய் குழந்தை பெற :

அறிவாற்றல் மிக்க குழந்தை  பெற :

அழகாய் குழந்தை  பெற :-





மனமகிழ்வு  மாறா  மருவின்  மகவின் 


மனமதியின்  மாண்பின்  மருந்து ..................குறள் 



கணவன் மனைவி  இருவரும் ஒருமித்து  உயர்ந்த எண்ணத்துடன் நீராடியபிறகு மகிழ்வாய்  மருவுதல் ,குருதியோட்டத்  தொடர்பால்  உண்டாகும்  கருக்குழந்தை  பிற்காலத்தில் பெறும்  அரிவாற்றல்லுக்கு  மிக சிறந்த  மருந்து என்பது  முற்றிலும் உண்மை .

இக் குறள் முற்று மோனையில்  அமைந்துள்ளதும்  ஒரு சிறப்பே .


அழகாய் குழந்தை  பெற :-



கருத்தரித்த  மூன்றாம்  மாதத்திற்கு  பிறகு  பசும்  பாலில்  செம்மலரின் மொட்டு  இட்டு  காய்ச்சி  நாளும் ஒரு வேளை  பருகி வர  குழந்தை  அழகுடன் 
செம்மை நிறமாய்  பிறக்கும் ,


செம்மலர் மொட்டு = ரோஜா மொட்டு  அல்லது   குங்குமப் பூ  தூள்கள் .

வியாழன், 25 செப்டம்பர், 2014

தாய் சேய் நலம் :

தாய்  சேய்  நலம் :







தாய்ப்பாலில்   வேம்பு துளிர்  சீரகம் கார்மிளகு

சேய்வேப்பங்  காரச் சிறப்பு .              ----------------குறள்


வேம்பின்  துளிர்  இலை -5 உடன் 4 சீரகம்  மிளகு 1 இம்  மூன்றையும் (எண்ணிக்கையில் எடுக்க)
இடித்து  மெல்லிய  வெள்ளை  துணியில்  முடிந்து  அதை தாயின் பாலில் ஊற  வைத்துவிட்டு குழந்தையை  குளிப்பாட்டிவிட்டு  ,பிறந்த  ஒரு மாதத்தில்  இருந்து   16 நாள்  இருதுளி அளவு  நாவில்  தடவி  வர  குழந்தைக்கு
இளமையில்  நோய் எதுவும்  வராது .

வெள்ளை படுவது நிற்க :

வெள்ளை படுவது நிற்க :

சோம்புகடுக்   காய்நெல்லி  சீரகம்  மாசிக்காய் ,
தேம்புவெள்ளை  நோய்க்கு  மருந்து .       ---------குறள்   

சோம்பு,கடுக்காய்தூள் ,நெல்லிகாய் ,சீரகம்,மாசிக்காய்  இவற்றை  எடுத்து  தூளாக்கி  நெய்யில்  காலை மாலை  உண்ணவிர்க்கு  முன் அருந்திவர  வெள்ளை  நோய் தீரும் .

மஞ்சள் காமாலை நோய் தீர மருந்து

மஞ்சள் காமாலை  நோய் தீர  மருந்து :



கூட்டுங்கா  மாலைக்கு  கொழுந்திலைப்  பூவரசு

நாட்டுமிள  கோரேழு  நாள் .---------------------------குறள்


பூவரசுக்  கொழுந்தும்  மிளகும்  சேர்த்தரைத்து
நெல்லிக்காய்  அளவு  ஏழு  நாள் காலையில்  தொடர்ந்து  அருந்தினால்
கமலை நோய்  தீரும் .

புதன், 24 செப்டம்பர், 2014

வெங்காயத்தின் பயன்கள்


                          வெங்காயத்தின் பயன்கள் 




                          



நங்காயம் நன்மையுற  நாளும் உணவினிலே ,
வெங்காயம்  சேர்த்தல்  விரும்பு ------------------குறள் 


வெங்காயம் உண்பதினால்  பித்த மிகுதியால்  உண்டாகும்  மயக்கம் ,தளர்ச்சி  உண்டாவதில்லை .

மூல நோய்  உள்ளவர்கள்  வெங்காயத்தை நாள் தவறாமல்  காலையில்  உண்டு வர நன்று நோய் தீரும்.

வெங்காயத்தை  சாறு பிழிந்து  அதி  காலையில்  அருந்தினால்  காக்கை  வலிப்பு நோய்  குணமாகும் .

வெங்காயத்தை  தனியாக  வேகவைத்து  உணவுக்குமுன்  சாப்பிட்டு  வந்தால் 
நல்ல தூக்கம்  வரும் 

நெய்யில் வெங்காயத்தை  பொரித்துன்ன உடல் வன்மையும் ,திண்மையும்  பெரும் 

குரல் வலிமை,இனிமை  பெற ,நெஞ்சில்  கபம்  நீங்க  வெங்காயம்  சிறந்த  மருந்து ..

தலயில் ஏற்படும் பூச்சி வெட்டு  நீங்கி  முடி முளைக்க  வெங்காயத்தை வெட்டி  பூச்சி வெட்டு  உள்ள இடத்தில  தேய்த்து வர  முடி  முளைக்கும் .

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

தோலில் வெண் புள்ளி மறைய

 

 

 தோலில் வெண் புள்ளி  மறைய 

 
வெட்டிய  எட்டிவித்து  வேம்புவிதைச்  சாற்றினிலே  
 
 
பட்டிடவுண்  வெண்புள்ளி நோய்க்கு .......குறள் 
 
 
 
 
மூக்கை  வெட்டிய  எட்டிக்  கொட்டையைச்  சுத்தி  செய்து உடன் வேம்புவிதை (வேப்பங்கொட்டை )
அரைத்து  கடலையளவு  மாத்திரை ஆக்கி  உண்டுவர  தோலில் உண்டான  வெண்புள்ளி  தீரும் .
 

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

கர்ப்பம் கலைந்து சிரமப்படுவர்களுக்கு கரு நிலைக்க வழி



                                   சத் குருவின் அடி போற்றி 

 
                           கர்ப்பம்  கலைந்து  சிரமப்படுவர்களுக்கு  கரு நிலைக்க  வழி 
 
 
கருப்பங் கலைந்தால் கனிமா  துளம்தோல் 
பெருமரப்  பட்டைய  சோகு .-------------------குறள் 
 
 
தாய் கருவுற்ரும் ,பின்னர்  கலைந்துவிட்டால் ,அதற்கு   மாதுளம்  பழ  தோல்   உடன்
அசொகமரப் பட்டையும்  சம  அளவு எடுத்து  கொதி நீரிட்டுப் பதமுடன்  45 நாள்  காலையில்
அருந்தி வர  உடல்  நலம்  தேறி ,நலம்  பெற்று  மீண்டும்  கரு  உண்டாகி   நிலைத்துப்  பிறக்கும் .
 
 
.

ஈரல் புண் குணமாக




                           ஈரல் புண்  குணமாக 


ஈரல்புண் கொண்டோரை  ஈக்கள்   மொய்ப்பதைக்  காணலாம் 
கனிந்த பழத்தை ஈ மொய்ப்பது  போல் .-----நோய் அறிகுறி


மருந்து :


கருநொச்சி  வாதநோய்  கல்ஈரல் நோய்க்காம்

ஒரு இலவங்கம்  பூண்டு மிளகொடு ........குறள்  


கருநொச்சி  இலையோடு இலவங்கம் ,பூண்டு, மிளகு  இவற்றை  சேர்துண்ண  கல்லீரல்,மண்ணீரல் ,நுரையிரல்  ஆகிய  மூவிரல்  நோயும்  வாத நோயும்  தீரும் .


 

குடல் புண் ஆறுவதற்கு

 

 

 

குடல் புண்  ஆறுவதற்கு :



துளிர்கொய்யா  மென்கொழந்து  தேன்கலந்      துண்ணின்

நெளிபுண்  சீழ்  மாற்றும்  மருந்து .-------குறள்


கொய்யாமரத்தின்  தளிரிலைகளை  எடுத்தரைத்து  அதனுடன்  தேன்  கலந்துண்டு  வந்தால் வெகு விரைவில்  குடல்  புண்  ஆறிவிடும் .


 

புதன், 17 செப்டம்பர், 2014

கருவுற (மகப்பேரியல் ) 2

கருவுற (மகப்பேரியல் )

மவுனத்தில்  துத்தி விதை  மன்னுநெ ல்செம்  பாளை

தவத்தெண்ணெய்  ஆண்நெய்  பெண்  சார்பு .


பேசா  நோன்பிருந்து  துத்தி விதையைச்  செம் பாளை நெல்லில்  போட்டி இடித்து உமியை போக்கி  அதில்  ஐந்து  கிராம்  அளவு  மூன்று நாளும் நல்லெண்ணெய் யில்  உண்டால்  ஆண்  பிள்ளையும் நெய்யில்  உண்டால்  பெண்  பிள்ளையும்  பிறக்கும்  இது திண்ணம் .


Panchamukha Prathyangira Devi Trust's photo.


இந்த  அம்பாளை  வணங்கி குழந்தை  வரம்  பெருக 

கருவுற (மகப்பேரியல் )

Panchamukha Prathyangira Devi Trust's photo.

கருவுற (மகப்பேரியல் )


தப்பாமல்  தாய் கருவாம்  சாரணை வெண்  குன்றிவேர்

திப்பிலி  பூண்டு  மிளகு .- குறள்


சாரணை வேர் ,வெள்ளைகுன்றிமணி வேர் ,திப்பிலி ,பூண்டு ,மிளகு  இவை  ஐந்தும்  சமமாக  நீர் விட்டரைத்துப்  பழமளவு  நீராடியபின்  மூன்று நாளும்  உண்டு  வர  கண்டிப்பாக  கருத்தரிக்கும்







கட்டிகள் உடைய /மறைய












                    கட்டிகள்  உடைய  /மறைய



பலா வேரால்  கட்டி பழுக்கும் அமுங்கும் ,

நிலாவுடல்  நோயும்  நிலைத்து ............குறள்



பலாமர வேரை  அரைத்துப் பூச , கட்டி சிறிதாயின்  அழுந்தியும் ,பெரிதாயின்  பழுத்து  உடைந்து மறைந்து போகும் ,பின் உடல் நோயும்  தீரும் .

எளிதில் கருத்தரிக்க





எளிதில் கருத்தரிக்க :

அரசங்  கொழுந்தோடே  ஆன் பாலுங்  கூட்டித் ,
தரின்கரு  தங்கும்  தகைத்து .............குறள் 


குழந்தை வேண்டிய  தாய்  அரசமரக்  கொழுந்து இலையை  மை  போல்  அரைத்துப்  பசும்  பாலில் கலந்து  அருந்திவர  கருஜெனிக்கும் .


மூலநோய் மருந்து

மூலநோய் மருந்து 

ஆவாரைப்  பூத்துளிர்  அப்பட்டை  வேரரசு ,
மேவார்க்குள்  முல  மிலை .....குறள் 


ஆவாரை இலைத்துளிர் ,பூ ,பட்டை  இவற்றுடன்  அரச மர வேர்பட்டைத்தூளும்  சேர்ந்த  ஊறல்நீர்  அல்லது  கொதிநீர்  காலை  மாலை  அருந்திவர  உள்முலம் நோய்  தீரும் .

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

கல்லடைப்பு நீங்க

 
 
 
கல்லடைப்பு  நீங்க
 
 
சிறுநீரில்  கல்லடைப்பு  சேர்ந்திட்டால்  ஓமக் 
 
குருங்க்கொதிநீர்  மாந்திடின்  நன்று . -----  குறள்
 
 
 
சிறுநீரில்  கல்லடைப்பு  ஏற்பட்டால்  ஓமத்தை  நன்றாக  தீட்டிப்   புடைத்துப்  பொன்வறுவல்  செய்து 
 
நாலில்  ஒன்றாகச்  சுருங்கக்  காய்ச்சிய  கொதிநீரை  குடித்து  வந்தால்  கல்லடைப்பு  நீங்கும் .  
 


 
 
 
 

கேன்சர் குணமாக

 

 

 

 

 கேன்சர் குணமாக :

 
பூண்டு  மிளகு  வெள்ளறுகுத் தூள்
 
வேண்டும்பல்  புற்றுநோய்க்  குண் .----குறள் 
 
 
பூண்டு ,மிளகு, புதுவெள்ளருகு  இவற்றை சம அளவு   பொடி செய்து  காலை  மட்டும்  மூன்று கிராம்க்கு  குறையாமல்  தொடர்ந்து 48 நாள்  சாப்பிட்டு வர  நோய்  தீரும் . 

வெள்ளை படும் நோய் குணமாக

வெள்ளை படும் நோய்  குணமாக :

 
கண்டு  படிகாரம்  காய்நெல்லி  நீர்மோரில் ,
 
கொண்டிடின்  வெள்ளை நோய்  ஏது ?.-----குறள் 
 
 
 
 
கற்கண்டு ,பொரித்த படிகாரம் ,நெல்லிவற்றல்  இம் மூன்றையும் நுண் துளாக்கி  ஐந்து  கிராம்  அளவு  காலையில் மாலையில்  உணவுக்குமுன்  ஏழு நாள் தொடரவும் நோய் தீரும் .

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

இதய நோய் குணமாக


                         அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய்  வாழ வேண்டி

 இதய நோய்  குணமாக :

 
இதயநோய்  வாராமல் எந்நாளும்  காக்கும் 
 
பதப்பாலில்  வெங்காயம்  பூண்டு .
 
 
பாலில்  வெங்காயமும்  பூண்டும்  சேர்த்து  காய்ச்சிப்  பக்குவமாக  அருந்திவர  இதய  வாராமல்  காக்கும் 
 .
வரும்முன் காக்க :
 
பச்சை பூண்டு  ஐந்து பல்  அரைத்து  ஒரு குவளை  மோரில்  கலக்கி  குடிக்கவும்  இதய நோய்
வராது .

 

குழந்தை நலம்

                     குழந்தை நலம் 

 
சேய் சாம்பல்  மண் தின்றால்  கிழாநெல்லி  வேர்கடுக் 
காய்மிளகு  வெந்நீர்  அருத்து ----குறள் 
 
 
 
 
சாம்பல் ,மண்  இவற்றை  தின்னும்  குழந்தைகளுக்கு  கீழாநெல்லி வேர் ,கடுக்காய் ,மிளகு  இம் 3யும் மை போல்  அரைத்துக்  காலையில்  நான்கு  கிராம்  அளவு  உள்ளுக்கு கொடுக்க வேண்டும் .அதனால்  தீயமலக்கிருமிகளுடன்  திண்ற  மண் ,சாம்பல்  இவையும் வெளியாகும் .குழந்தையும்  அப்  பழக்கத்தையும்  மறந்து  விடும் .
 
 

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

 

                               புற்றுநோய் மருந்து 

 
தூது முருங்கை கருவேல்  பிசின்  முன்றன் ,
தாதுதூள்  புற்றுக்கு  மாற்று .------குறள் 
 
 
தூதுவளை ,சமஅளவு   முருங்கைப்பிஞ்சு,பூ ,இலை ,வேர்ப்பட்டை  இவற்றுடன்  கருவேலம் பிசினும்  சேர்ந்த நுண் தூளை  தேனில்  உண்டு  வர  புற்றுநோய்  தீரும் சமஅளவு