Powered By Blogger

செவ்வாய், 13 ஜனவரி, 2015

Aloe vera uses கற்றாழை மருத்துவ பயன்கள்



கற்றாழை மருத்துவ  பயன்கள் :

மூல நோய்க்கு :

காய்ச்சிய பசும் பாலில்கற்றாழை தோல் சீவிய துண்டுகளை  ஊற வைத்து துண்டை எடுத்து பத்து நாள் தொடர்ந்து சாப்பிட்டு  வந்தால்
ஆசனவாய் எரிச்சல் ,மூலச் சூடு ,சொறி  தீரும் .

முகம் பளப்பளப்பாக மாறிட :

கற்றாழை  சதையை எடுத்து  முகத்தில் பூசி ஊற வைத்து பின்பு கழுவினால்
தோலில்  உள்ள  சுருக்கங்கள் மாறி பள பளப்பாகும் .

காயங்கள் ஆறுவதற்கு :

கற்றாழையை கீறி பிளந்து சதை பகுதியை  காயத்தின் மீது வைத்து கட்டுப் போட வேண்டும் .காயம் ஆறும் வரை தினமும் இரு முறை செய்யவும்
ஒருமுறை மட்டுமே ஒரு துண்டைப் பயன்படுத்தவும் .

திங்கள், 12 ஜனவரி, 2015









பழனி பாதயாத்திரை காவடி பூஜை

அன்புடன் அனைவரும் ஆனந்தமாக வாழ  வேண்டி 

பஞ்சமுகப்ரதியங்கிரா தேவி பக்தர்கள் சார்பாக காரைக்குடியில் 23.01.2015
வெள்ளிக்கிழமை காலையில்  காவடி பூஜை நடை பெற உள்ளது 
காலை 10 மணி முதல் பஜனை நடை பெரும் அதை தொடர்ந்து காவடி தீபாராதனை ,அன்னதானம் நடை பெரும் 

நாள் 23.01.2015,வெள்ளிக்கிழமை 

 இடம் :
பெத்தா முருகப்ப செட்டியார் வீடு 
81 மெ .மெ  வீதி காரைக்குடி

வேண்டத்தக்கது  அறிவாய் நீ 
வேண்ட முழுதும் தருவோய்  நீ 
வேண்டி நீ யாது அருள்  செய்தாய் 
யானும் அதுவே வேண்டின் அல்லால் 
வேண்டும் பரிசு  உண்டென்னில் 
அதுவும் உன்றன் விருப்பன்றே 

அன்புடன் அனைவரும் நலம் பெற அழைக்கிறோம் அனைவரும் வருவீர் அருள் பெறுவீர் 

தொடர்புக்கு: சுந்தர் -9842858236
 

வெள்ளி, 9 ஜனவரி, 2015

Aloe Vera- காய கல்ப கற்றாழை


கற்றாழை :

சித்தர்களின்  காய  கல்ப மூலிகைகளில்  முதன்மையானது  கற்றாழை
எளிதில் எங்கும் கிடைக்கும் சுலபமாக உபயோகப்படுத்தலாம் .

பயன் படுத்தும் விபரம் :

கற்றாழை ,சோற்றுக் கற்றாழை ,குமரி ,கன்னி  என பல பெயர்கள்  உண்டு
தேரையர் இதை பயன்படுத்தினால்  இளமையாக வாழலாம்  என குறிப்பிட்டுள்ளார் .

விஷ முறிவிற்கு :

 உடலில்  இருக்கும் எவ்விதமான  விஷமானாலும்
கற்றாழையின் தோலை சீவி சதையை மட்டும்  ஒரு கைப்பிடி எடுத்து அதனுடன்  சம எடை நன்னாரி வேர் இவை இரண்டையும் கலந்து சாப்பிட்டால் விஷம் முறியும் .இதை சாப்பிட இயலாதவர் இதனுடன்  கொஞ்சம் நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிடலாம் .
மூன்று நாள்  உணவுக்குமுன்  சாப்பிட்டால் நன்று .

அல்சருக்கு  கை கண்ட மருந்து :

 பல விதமான அல்சருக்கு உணவுக்கு முன் சிறிதளவு கற்றாழை  சோறை எடுத்து சாப்பிட்டால் குணமாகும் .கசப்பின் காரணமாக சாப்பிட இயலாதவர் கற்றாழை ஜூஸ்  வாங்கி 30 மில்லி தினமும் குடித்து வந்தால் அல்சர் குணமாகும் .

தீப்புண் ஆருவதற்கு :

 சமையல் செய்யும் போது ஏற்படும்  தீப்புண்களுக்கு
மேல் பூச்சாக பூசி வந்தால் புண் விரைவில் ஆறும் .

தலைமுடி  நன்கு வளர :

100 கிராம் கற்றாழை  சோறை 500 மில்லி தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி வைத்துக்கொண்டு  தினமும் தலைக்கு தடவி வந்தால் முடி கொட்டுவது நின்று நன்கு வளரும் ,தலை,கண்  குளிர்ச்சியடையும் .





சனி, 3 ஜனவரி, 2015

medicine for ladies பெண்ணுக்கு கருவுற மருந்து

 medicine for ladies  பெண்ணுக்கு கருவுற மருந்து  

கடலைவேர் தோடை குறிஞ்சான் எருக்கு ,
விடல் பிரண்டை  பெண்மலட்டின்  மாற்று .   குறள் 


கடலை வேர் ,ஆடாதோடை வேர் ,சிறு குறிஞ்சான் வேர்  எருக்கு  வேர்  ,பிரண்டை  இவை  சேர்த்து அரைத்துப்  பழமளவு  நிராடிய  மூன்று  நாளும்  உண்டு  வர  பெண் மலடாக  இருந்தாலும் அது  நிவர்த்தியாகும் .

பொதுவாக  வித்தில்  குற்றமின்றி விதைக்கும் நிலம் போன்ற  பெண்ணால்  குறையில்லை 
குறை தீர ஆண்மகன்  மருந்துன்ன வேண்டும்