Powered By Blogger

புதன், 31 டிசம்பர், 2014

Medicine to conceive-கர்ப்பம் தரிக்க மாமருந்து

கர்ப்பம்  தரிக்க  மாமருந்து :


வாறான   மங்கையர்  கெர்பமாக
வறையுறேன்  பசும்பாலு  வசம்புந்தானும்
நீறான் விழுதிஇலை  மூலிதானும்
நிலையான குப்பை மேனி  சமனாய்க்  கூட்டி

காறான பால் தனிலே  குழப்பியே தான்
கனமாக  இருவேளை  கொண்டாயானால்
சோரான  கிருமியது  அற்றுப் போகும்
செனிக்குமே  பிள்ளையது  செனிக்கும்  பாரே .........தன்வந்திரி மகரிஷி

விளக்கம் :


தன்வந்திரி பகவான்  பெண்கள் கர்ப்பம் தரிக்க  உடலைப் பக்குவப்படுத்த
சுரண  முறை வைத்தியத்தை  பற்றி சொல்லி இருக்கிறார்  அதை கொண்டு பலன் பெறாலாம்
தன்வந்திரி  மகரிஷியை  வணங்கி  அவர் ஆசியை பெற்று வைத்தியத்தை ஆரம்பிக்கவும் .

வசம்பு,விழுதி இலை மூலிகை ,குப்பைமேனி  இம் மூன்ரையும் சம அளவுஎடுத்து நிழலில் உலர்த்தி  சரி எடையாக  எடுத்து இடித்து  வைத்துக்கொள்ளவும் .
இச் சூரணத்தை பசும் பாலில் காலை-மாலை உணவுக்கு முன் குழப்பி சாப்பிட்டு வர ,கர்ப்பப் பையில் இருந்திடும் கிருமிகள் அழிந்து போய்  கர்ப்பம் தரித்து குழந்தை..

செனிக்குமது பிள்ளையது பிறக்கும் பாரு
தெளிவாகும் திரேகமது சொலிக்கும் பாரு
கனிக்குமே இந்த முறை பொய்யாதையா
காசினியில் யாரும்தான் சொல்லமாட்டார் .......தன்வந்திரி  மகரிஷி


 வசம்பு
விழுதி இலை (ஆலமரத்து இலை ) மூலிகை
குப்பைமேனி -------பசும் பால்






   

திங்கள், 29 டிசம்பர், 2014

பழனி பாதயாத்திரை காவடி பூஜை




பழனி பாதயாத்திரை காவடி பூஜை
அன்புடன் அனைவரும் ஆனந்தமாக வாழ  வேண்டி 

பஞ்சமுகப்ரதியங்கிரா தேவி பக்தர்கள் சார்பாக காரைக்குடியில் 23.01.2015
வெள்ளிக்கிழமை காலையில்  காவடி பூஜை நடை பெற உள்ளது 
காலை 10 மணி முதல் பஜனை நடை பெரும் அதை தொடர்ந்து காவடி தீபாராதனை ,அன்னதானம் நடை பெரும் 

நாள் 23.01.2015,வெள்ளிக்கிழமை 

 இடம் :
பெத்தா முருகப்ப செட்டியார் வீடு 
81 மெ .மெ  வீதி காரைக்குடி

வேண்டத்தக்கது  அறிவாய் நீ 
வேண்ட முழுதும் தருவோய்  நீ 
வேண்டி நீ யாது அருள்  செய்தாய் 
யானும் அதுவே வேண்டின் அல்லால் 
வேண்டும் பரிசு  உண்டென்னில் 
அதுவும் உன்றன் விருப்பன்றே 

அன்புடன் அனைவரும் நலம் பெற அழைக்கிறோம் அனைவரும் வருவீர் அருள் பெறுவீர் 

தொடர்புகொள்ள 
;சுந்தர்-



Teeth ,Gum பல் ஈறு பலப்பட /அழுகல் நீங்க


பல் ஈறு பலப்பட /அழுகல்  நீங்க


மிளகுசோற்  றுப்பு  மிகாதொன்றாய்க்  கூட்டின்
அளவு பல்  தீநீர்  தவிர்ப்பு ......................குறள்

விளக்கம் :

மிளகு , சோற்று உப்பு  இரண்டையும்  சம அளவு எடுத்து பொடி செய்து  இரண்டு கிராம் அளவுஎடுத்து  காலை ,மாலை  பல் துலக்கி அழுகிய பக்கம் தலை சாய்த்து  படுத்திருந்தால் கெட்ட நீர்  முற்றும்  வெளியாகும் ,நோய் குணமாகும்    

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

கார்த்திகேய ப்ரபாவம்


கஷ்ட நிவர்த்தி  மாமருந்து:

மஹா பாரதத்தில்  வன பர்வத்தில்  மார்கண்டேய மகரிஷியால்
தர்மபுத்திரர்க்கு உபதேசிக்கபட்ட கார்த்திகேய ப்ரபாவம்  எனும்  ஷண்முக  மந்திரம் ---

அன்புடன்  உலக மக்கள் அனைவரும்  படித்துப் பயன் பெற
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரதியங்கிரா  கோயில்  சுவாமிஜி அவர்கள் ஆசியுடன்

 பாராயணம் செய்து பயன் பெருக  வளம் பெருக .

ஓம் குரு குஹாய  நமஹா
ஓம் ஆக்நேயா நமஹா
ஓம் ஸ்கந்தாய  நமஹா
ஓம் தீப்த  கீர்த்தையே  நமஹா
ஓம் அனாமையாய  நமஹா
ஓம் மயூர கேதவே நமஹா
ஓம் தர்மாத்மனே  நமஹா
ஓம் பூதேசாய  நமஹா
ஓம் மகிஷா ர்த்தனாய நமஹா
ஓம் காமஜிதே நமஹா
ஓம் காமதாய  நமஹா
ஓம் காந்தாய நமஹா
ஓம் சத்யவாஹே நமஹா
ஓம் புவநேஸ்வராய நமஹா
ஓம் சிசுவே நமஹா
ஓம் சீக்ராய  நமஹா
ஓம் சசயே நமஹா
ஓம் சண்டாயயே ------------------------------18
ஓம் தீப்தவர்நாயே  நமஹா
ஓம் அமோகாயே  நமஹா
ஓம் அனகாயே  நமஹா
ஓம் ரவுத்ராயே நமஹா
ஓம்  ப்ரியாய நமஹா
ஓம்  சன்றானநாய  நமஹா
ஓம் தீப்தசக்தையே  நமஹா
ஓம் பிரசாந்தாத்மனே    நமஹா
ஓம் பத்ரக்ருதே நமஹா
ஓம் கூடமோ ஹணாய நமஹா
ஓம் சஷ்டி ப் ரியாய நமஹா
ஓம்   தர்மாத்மனே நமஹா
ஓம்  பவித்ராய  நமஹா
ஓம் மாத்ருவத்சலாய நமஹா
ஓம் கன்யா பர்தாய நமஹா
ஓம் விபக்தாய நமஹா
ஓம் ச்வா ஹெய்யாய நமஹா
ஓம் ரேவதி சுதாய நமஹா --------------------36
ஓம்  பிரபவே  நமஹா
ஓம்  நேதாய நமஹா
ஓம் விசாகாய நமஹா
ஓம் நைக மேயாய நமஹா
ஓம் சுச்சராய  நமஹா
ஓம் சீவ்ரதாய நமஹா
ஓம் லலிதாய நமஹா
ஓம்  பால க் ரீட னக  ப்ரியாய நமஹா
ஓம்  கசாரீ ணே    நமஹா
ஓம் ப் ரம சாரிணே  நமஹா
ஓம் சூராய  நமஹா
ஓம் சரவநோத்பவாய நமஹா
ஓம் விஷ்வாமித்திர ப்ரியாய   நமஹா
ஓம் தேவசேனா ப்ரியாய நமஹா
ஓம் வாசுதேவ  ப்ரியாய  நமஹா
ஓம் பிரியாய    நமஹா
ஓம் பிரியக்ருதே  நமஹா
ஓம் கார்த்திகேயாய நமஹா ---------------54

தினமும்  காலையில் இரு முறை படித்து வர  நன்று .
 கார்த்திகேய ப்ரபாவம் முற்றியது 


எந் தாயும்  எனக்கருள்  தந்தையும்  நீ
சிந்தாகுல  மானவை  தீர்த்  தெனையாள்
கந்தா கதிர்வேலவனே  உமையாள்
மைந்தா குமார மறை நாயகனே .---கந்தரனுபூதி






Child health protection - குழந்தைகள் நலம் காக்க


குழந்தைகள் நலம் காக்க

இருகாய்  அதிமதுரம் ஈரத்தை யக்கிர
ஒருவசம்பு  சேய்நோய்  உறைக்கு              குறள்

விளக்கம் :

சாதிக்காய் ,மாசிக்காய் ,அதிமதுரம் ,சிற்றரத்தை ,பேரரத்தை ,அக்கிராகாரம் ,வசம்பு   இவ் ஏழு பொருட்களையும்  சம அளவு எடுத்து  தூளாக்கி  பச்சை  வெற்றிலை  சாறை விட்டு  அரைத்து  உருட்டி காய வைத்துக்கொள்ளவும்
ஒரு நாள் விட்டு ஒரு நாள் 5 உறை தாய் பாலில்அல்லது தேன் /வெந்நீர்  கொடுத்தால்  மிகவும் நன்று .




திங்கள், 15 டிசம்பர், 2014

ஆதாரமாக வரும் முருகன்

யாருமற்ற பேருக்கு  ஆதாரமாக  வரும்  முருகன்

ஆதாரமிலேன்  அருளைப்  பெறவே
நீதான்  ஒரு  சற்று நினைந்திலையே
வேதாகம   ஞான  வினோத மனா
தீதா  சுரலோக  சிகாமணியே .......கந்தரனுபூதி 

உலகத்தின்  அனைத்து பற்றுக்களையும் இழந்தவர்க்கு ஆதாரமாக இருந்து அருள் புரிவவன்  முருகன்  ---அருணகிரிநாதர்


சனி, 13 டிசம்பர், 2014

Increase memory power குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்க

Increase Memory power 

குழந்தைகளுக்கு  நினைவாற்றல் அதிகரிக்க 


வல்லாரைப்  பாகு வழங்கும்  நினைவாற்றல்
நல்லாவின்  பால் பின் அருந்து ...............................குறள்

விளக்கம்


வல்லாரைக் கீரையை  காய வைத்து தூள்  செய்து கொண்டு அதனுடன்
சாதிக்காய் ,சாதிப்பத்திரி ,மாசிக்காய் ,வால் மிளகு  இவற்றின் தூளை

50 கிராம் வல்லாரை தூள் மற்ற 4கின் தூள் 20 கிராம்  சேர்த்து  பனங்கல்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து   பாகாக  வைத்துக்கொண்டு தினமும் காலை உணவுக்கு முன் 5 கிராம் எடுத்துகொடுத்து  சாப்பிட வைக்கவும் .பின் பசுவின் பால் அருந்தக் கொடுக்கவும்

நினைவாற்றல் அதிகரிக்கும் ,இதயம் வலுப்பெறும்

அல்லது  இவற்றின் தூள் சேர்த்து வைத்து அதில் 5 கிராம் எடுத்து தேனில் குழைத்து உண்ண கொடுக்கலாம் ,பின் பசும் பால் கொடுக்கவும்



வியாழன், 11 டிசம்பர், 2014

Eye sight improvement for all age கண் பார்வை வலுப்பெற

Eye sight  improvement for all age
கண் பார்வை  வலுப்பெற 



நீலியொடு  மஞ்சள் கரிசலை வல்லாரை
மூலிநுண்தூள்  கண்பார்வைக் குண்  -------குறள்


விளக்கம்


அவுரி எனும் நீலி ,மஞ்சள் கரிசலாங்கண்ணி ,வல்லாரை  இம் மூன்ரையும் 

சம அளவு  எடுத்து  நிழலில்  உலர்த்தி நன்கு காய்ந்த பிறகு இடித்து தூளாக்கி

 தினமும் காலையில் 2 கிராம் அளவு தக்க அனுபானத்தில்  அருந்திவர கண் பார்வை 

தெளிவாகும் .
அனுபானம் : பசும்  பால்,தேன் ,நீர்  


     

வெள்ளி, 5 டிசம்பர், 2014

Improve your face tone முக அழகு பெற


Improve your face tone   முக அழகு பெற 


இளமுருங்கை   வேரும் இலைதுளசி வேரும்

கொளுங்குளியல்  மேனி  முகத்து .............குறள் 


விளக்கம் 

இளம் முருங்கை வேரும் ,துளசி இலை ,வேர்  சம அளவு  எடுத்து  அரைத்து  
முகத்தில் பூசி ஊற வைத்துக்  கழுவி   வந்தால்  முகம் சிகப்பாக அழகாக  மாறும் 
உடல் முழுவதும் பூசிக் குளிக்க மேனி அழகாகும் 
 

வியாழன், 4 டிசம்பர், 2014

Food allergy medicine உணவினால் ஏற்படும் நஞ்சு மாற







உணவினால்/மருந்தினால்  ஏற்படும்  நஞ்சு மாற :

எம்மருந்து நஞ்செனினும் ஏற்கா தவுரிவேர்

செம்மிளகு  வல்லாரை  சேர் ................குறள்


விளக்கம்

அவுரி வேரோடு மிளகு, வல்லாரைக் கீரை  இவை சேர்த்து கொதிக்க வைத்து அருந்திவன்தால்  மருந்தினால் உள்ள வீரியமும் ,உணவினால் ஏற்பட்ட நஞ்சும்  நீங்கும் .


புதன், 3 டிசம்பர், 2014

திமிர் வாத நோய்க்கு குப்பைமேனி

திமிர் வாத நோய்க்கு குப்பைமேனி 



காந்திமெ  யிலைக் கறி  கனிவுட யில மெய் 
யாந்திமிர்   வாதநோ  யாதிகள்  போய்விடும் .....தேரையர்


காந்திமெய்  எனும்  குப்பைமேனி இலையை   கறியாக  சமைத்து  விருப்பமுடன்  தொடர்ந்து உணவில் சேர்த்து உண்டு வர  உடலில் ஏற்படும்
திமிர் வாத நோய் முற்றிலும் குணமாகும் .

(குதி கால் வலி ,முழங்கால் வலி )உடலில்வாதத்தினால்  ஏற்படும் அனைத்து  வழியும் தீரும் .




திங்கள், 1 டிசம்பர், 2014

Jaundice Medicine மஞ்சள் காமாலை நோய் தீர மருந்து :

Jaundice Medicine
மஞ்சள் காமாலை நோய் தீர  மருந்து :

கூட்டுனங்கா  மாலைக்குக்  கொழுந்திலைப்  பூவரசு

நாட்டுமிள  கோரேழு  நாள் .................குறள்


விளக்கம் :

காமாலை நோய் தீர  ஒரு கைப்பிடி அளவு பூவரசுஇலை  கொழுந்தும் 11 மிளகும்  சேர்த்தரைத்து அதில்  நெல்லிக்காய்  அளவு காலையில் தொடர்ந்து 7 நாள் அருந்திவர  கொடிய காமாலை நோய் நீங்கும்  

பத்தியம் எண்ணெய் ,நெய்,உளுந்து  சேர்க்கக்கூடாது .