Powered By Blogger

புதன், 15 ஏப்ரல், 2015

சகஸ்ர சண்டி மஹா யாகம்

                                                      சகஸ்ர சண்டி மஹா யாகம்
                                                       (1000 சண்டி ஹோமம் )

மன்மத வருடம் ஆடி மாதம் 26ம்  நாள்  முதல் -29 நாள் முடிய   --- 11.08.2015 முதல் 14.08.2015 முடிய மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்ச முக ப்ரதியங்கிரா கோயிலில்   சகஸ்ர சண்டி மஹா யாகம்  நடை பெற உள்ளது .
பல விதமான ஹோமங்கள்  தினமும் நடை பெற உள்ளது

ஹோமங்களில் பங்கேற்க  கலசங்கள் வேண்டுவோர்  கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்

கோயில் :98428 58236,
சுந்தர் :9842916006,9865993238


Medicine for piles-மூல நோய் தீர



piles medicine-மூல நோய்  தீர :
பொது :
அனைத்து  வகையான  மூல நோய் உள்ளவர்களும்  காலையில்  வெறும் வயிற்றில்  குப்பைமேனி தூள்  பசும்  நெய்யில்   குழைத்து  உண்டு வர நன்று

ரத்த மூலம் :
பசும் பாலில் வெள்ளை பூண்டை கொதிக்க வைத்து பயாசம் போல்  செய்து அருந்தி வர  ரத்த  மூலம் ,நீரிழிவு  நோய் குணமாகும்

ஒன்பது வகை  மூலம் :

சுத்தி செய்த சேங்கொட்டை ,சுக்கு ,கடல்பாலை ,துத்தி இவற்றை சம எடை எடுத்து வெல்லம்  சேர்த்து  ஒரு கிராம் அளவு ஏழு  நாள் காலை,மாலை உண்டு வர  மூல  நோய் ஒன்பதும் தீரும் பூரண குணமடைய  தொடர்ந்து  காலையில் உண்டு வர நன்கு நோய் குணமாகும் .


வெளில் பூசும் மருந்து :

துரிசு ,வெடியுப்பு ,கல் சுண்ணாம்பு  இவற்றை நெய்யில்  குழைத்து
மேல் பூச்சாக  பூசிவர நோய் குணமாகும் .

உள் மூலம் குணமாக
;\பிரண்டை ,கற்றாழை  சம அளவு எடுத்து  அரைத்து  அதனுடன் சம அளவு கடுக்காய் ,நீர் முள்ளி ,சுக்கு,பூண்டு ,மிளகு எடுத்து அரைத்து , இரண்டையும்  சேர்த்தரைத்து  அதில்
மூன்று  கிராம் அளவு  நன்றாக புளித்த மோரில்  முன்று நாள் காலையில் உண்டு வர உள் மூலம்  குணமாகும்
3 நாள் இடைவெளியில்  மறுபடி இரு முறை  அருந்தவும்  நோய் முற்றிலும் குணமாகும் .

புதன், 8 ஏப்ரல், 2015

பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுக்கு: Menstrual problems


பெண்களுக்கான  மாதவிடாய்  கோளாறுக்கு: Menstrual problems


நிலப்பனை,பறங்கிச் சக்கை  இவற்றை அவித்து இருத்து  குடி நீராக குடித்து வர நன்மை .


கருஞ்சீரகம் ,சதக்குப்பை ,பெருங்காயம்  சம அளவு பொடியாக்கி  பனை வெல்லம்  இட்டு  பாகாக்கி  உணவு உண்பதற்கு முன்  காலை ,மாலை  மூன்று  நாள் மட்டும் கொடுத்து வந்தால் ருது வாகாத  பெண் ருதுவாக்கும் .
சீரான  மாத  விடாய்  இல்லாதவர்களும்  அருந்தினால்  சீராகும் .

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

வாத நோய் குறைய : for Paralitic attack


வாத நோய்  குறைய :Paralitic attack

முருக்கன்  அசோகிஞ்சி  மாவேர்  கடுக்காய்

சுருக்கனல் நீர்  வாத மருந்து -------------குறள்

முள் முருக்கன் வேர் ,அசோக மர வேர் ,மா மர வேர் ,இஞ்சி ,கடுக்காய்
சம அளவு எடுத்து  ஊற வைத்து  மறு நாள் அதை கொதிக்க வைத்து அதை குடி நீராக குடித்து வர  வாத நோய் படிப்படியாக குறையும் .